வேதாந்தா பங்குகள் அதிரடியாக உயர்வு!
வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் இன்று 6% உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியது.
புதுதில்லி: எண்ணெய் முதல் உலோகங்கள் வரையிலான தொழில்களைக் கொண்ட வேதாந்தா நிறுவனத்தின் பங்குகள் இன்று 6% உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியது. இந்த மாதம் இதுவரை வேதாந்தா பங்குகள் சுமார் 12% உயர்ந்துள்ளது.
பிஎஸ்இ-யில் 6.06% உயர்ந்து ரூ.675.70ஆக நிலைபெற்றது. இன்றைய வர்த்தகத்தில் நிறுவனத்தின் பங்கு சுமார் 6.63% உயர்ந்து ரூ.679.40 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
என்எஸ்இ-யில், வேதாந்தா பங்குகள் 6.04% உயர்ந்து ரூ.675.75 ஆக இருந்தது.
Advertisement
Advertisement
இந்த விலை உயர்வால், வர்த்தகம் நிறவடைந்த போது, நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2,64,224.92 கோடியாக உயர்ந்தது.
கடந்த ஆண்டு, இந்தப் பங்கின் விலை கிட்டத்தட்ட 36% உயர்ந்தது.
பங்குச் சந்தையில் நிலவிய மந்தமான போக்கிற்கு முற்றிலும் மாறாக வேதாந்தா பங்குகள் விலை உயர்ந்தது வருவது குறிப்பிடத்தக்கது.
Shares of oil-to-metals conglomerate Vedanta jumped 6 per cent on Wednesday to hit a record high.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.