முகப்பு
வணிகம்

பிப்ரவரி மாதத்தில் மின் நுகர்வு 1.86 சதவீதம் அதிகரிப்பு!

நாட்டில் மின் நுகர்வு பிப்ரவரி மாதம் 1.86 சதவீதம் அதிகரித்து 132.99 பில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.

Updated On : 1 மார்ச், 2026 at 1:46 PM
கோப்புப் படம்
பகிர்:

புதுதில்லி: நாட்டில் மின் நுகர்வு பிப்ரவரி மாதம் 1.86 சதவீதம் அதிகரித்து 132.99 பில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.

வழக்கத்தை விட அதிக வெப்பநிலை காரணமாக நீரை வெப்பமூட்டும் கீசர்கள் மற்றும் காற்றை வெப்பமூட்டும் ஏர்  ப்ளோவர் உள்ளிட்ட சாதனங்களின் பயன்பாடு குறைந்ததால், கடந்த வருடம் இது 130.56 பில்லியன் யூனிட்டுகளாக இருந்தது.

தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி மாதத்தில் உச்ச மின் தேவை பதிவு செய்யப்பட்ட 238.06 கிகாவாட்டிலிருந்து 243.15 கிகாவாட் ஆக உயர்ந்துள்ளது.

மே 2024ல் உச்ச மின் தேவை எப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் 250 கிகாவாட்டை தொட்ட நிலையில், முந்தைய அனைத்து நேர உச்ச மின் தேவையான 243.27 கிகாவாட் ஆக செப்டம்பர் 2023ல் பதிவான தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், கடந்த ஆண்டு கோடையில், ஏப்ரல் 2025 முதல் ஜூன் 2025 வரை உச்ச மின் தேவை 242.77 கிகாவாட் ஆக இருந்தது. 2025 கோடையில் உச்ச மின் தேவை 277 கிகாவாட்டை தொடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் ஏப்ரல் மாதத்தில் மின் நுகர்வு மற்றும் தேவையில் நிலையான வளர்ச்சி இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

summary

Power consumption in the country grew marginally by 1.86 per cent to 132.99 billion units in February from 130.56 Billion Units (BU) a year ago.

முழு கட்டுரையைப் படிக்க →