தமிழ்நாடு

குற்றாலத்தில் சீசன் தொடங்கியது: சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியல்

DIN

கேரளத்தில், தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குற்றாலத்திலும் சீசன் தொடங்கியுள்ளது.
பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளிக்கிழமை காலை முதல் தண்ணீர் விழத் தொடங்கியதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சீசன் நிலவும். கடந்த இரு ஆண்டுகளாக சீசன் களைகட்டாததால் சுற்றுலாப் பயணிகளும், வர்த்தகர்களும் மிகுந்த வருத்தமடைந்தனர்.
இந்நிலையில், நிகழாண்டு தென்மேற்குப் பருவமழை ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், கேரளத்தில் பருவமழை தொடங்கியது. அதன் தாக்கமாக குற்றாலம் மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது மெல்லிய சாரலுடன், குளிர்ந்த காற்றும் வீசியது.
வியாழக்கிழமை இரவு பெய்த மிதமான மழையின் காரணமாக பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தண்ணீர் விழத் தொடங்கியது. இதையடுத்து, குற்றாலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அருவிகளை நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
ஐந்தருவி: ஐந்தருவியின் நான்கு கிளைகளிலும் காலைமுதலே தண்ணீர் விழத் தொடங்கியது. இங்கு பேருந்து வசதி இல்லாததால் வாகனங்களில் வந்த சுற்றுலாப் பயணிகள் மட்டும் சென்று குளித்து மகிழ்ந்தனர். மாலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர்வரத்து வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

ரூ.2.79 லட்சம் மதிப்பிலான மளிகைப் பொருள்கள் திருட்டு

குச்சனூா் அருகே தடுப்பணை நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நலிந்தவா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

உடுமலை அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு: நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT