தேவையான பொருட்கள்
சிவப்பு அரிசிமாவு- 1 கிண்ணம்
கொதி நீர் - தேவையான அளவு
உப்பு - சிறிது
வெல்லத்தூள்- தேவையான அளவு.
தேங்காய் துருவல்- அரை கிண்ணம்.
செய்முறை
மாவில் உப்புப் போட்டு கொதி நீர் ஊற்றி கரண்டிக் காம்பால் கிளறவும். இடியாப்ப உழக்கில் பிழிந்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
சிறிது ஆற வைத்து உதிர்க்கவும். அதில் வெல்லத்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கரண்டிக் காம்பால் கிளறவும்.
சத்தானது. அதனால் பாதி அளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும். அரிசி மாவு இடியாப்பத்தைவிட ருசியாக இருக்கும்.
கொதி நீர் ஊற்றி ஆறுவதற்கு முன்பு பிழிந்தால் எளிதாக பிழியலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.