‘இருளும் ஒளியும்’ என்ற படத்தின் கதாநாயகன் நடிகர் முத்துராமன். இதை இயக்கியவர் கன்னட டைரக்டர் புட்டண்ணா. அவரிடம் ‘கிளாப்’ அடிக்கும் ‘பாயாக’ வேலை செய்தார் இன்றைய டைரக்டர் பாரதிராஜா. ஒரு முறை சரியாக ‘கிளாப்’ தட்டாததால் முத்துராமனுக்குக் கோபம் வந்து, ‘என்ன சார்! இந்த மாதிரி சரியாக வேலை செய்யாத பையனை எல்லாம் வைத்து என் நேரத்தை வேஸ்ட் பண்ணுகிறீர்கள்? என்று கோபமாகப் பேசினார். இதை எல்லாம் நினைவில் வைத்திருந்த பாரதிராஜா மறக்காமல் கி.போ.ரயில் வெள்ளிவிழாவுக்கு நடிகர் முத்துராமனை அழைத்து அவர் வாயாலேயே வாழ்த்தும் பெற்று விட்டார்!
கே.எஸ்.சுப்ரமணி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.