நிழற்குடை அமைக்கப்படுமா?
பம்மல் நகராட்சி அலுவலகம் அருகில் பம்மல்- பொழிச்சலூர் இணைப்புச் சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது.
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:05 PM
பம்மல் நகராட்சி அலுவலகம் அருகில் பம்மல்- பொழிச்சலூர் இணைப்புச் சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கிருந்து அஸ்தினாபுரம், கூடுவாஞ்சேரி, பொழிச்சலூர், மணிமங்கலம், திருவான்மியூர், துர்கா நகர் உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர். இந்த நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டிய நிலை உள்ளது. பயணிகளின் கடும் சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நகராட்சி அதிகாரிகள், தன்னார்வலர்கள் முன்வர வேண்டும்.