பஸ் வசதி கிடைக்குமா?
சென்னை-கிரகம்பாக்கம் தண்டலத்துக்குள்பட்ட பகுதியில் இருக்கும் ஆகாஷ்நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன.
சென்னை-கிரகம்பாக்கம் தண்டலத்துக்குள்பட்ட பகுதியில் இருக்கும் ஆகாஷ்நகரில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இங்கு சாலை வசதி மோசமாகவுள்ளது. இதனால் பஸ்கள் வருவதில்லை. பிரதான சாலைக்கும், ஆகாஷ் நகர் சாலைக்கும் இடையே 2 கிலோமீட்டர் தூரம் உள்ளது. பஸ் வசதி இல்லாததால் அனைவரும் நடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் தரமான சாலை அமைத்து, பஸ் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.