மேற்கு சைதாப்பேட்டையில் வசிக்கும் எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள், மகளிர், மாணவர்கள், சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல சைதாப்பேட்டை பிரதான பேருந்து நிலையத்துக்குச் செல்லவேண்டும். ஆனால், அதற்கு ஏற்ற வகையில் ஷேர் ஆட்டோ, ஆட்டோ வசதிகள் இல்லை. இதனால், சுமார் 45 நிமிஷங்கள் முதல் 1 மணி நேரம் வரை நடந்தே அங்கு செல்ல வேண்டி நிலை தொடர்கிறது. எனவே, அண்ணாசாலையிலுள்ள பிரதான பேருந்து நிலையத்துக்கு மேற்கு சைதைப்பேட்டையிலிருந்து சிற்றுந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரா.எத்திராஜன், மேற்கு சைதாப்பேட்டை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.