முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 291

மரணமில்லாப் பெருவாழ்வைத் தரவல்ல அமிர்தம் ததும்பும் வாக்கால் கவிமாலைகளைப் பாடும் திறனை,

Updated On : 28 ஜூன், 2016 at 5:40 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:08 PM

பதச் சேதம்

சொற் பொருள்

புமி அதனில் ப்ரபுவான

Advertisement

 

புமி: பூமி, குறுக்கல் விகாரம்; ப்ரபு: பிரபு—அரசன்;

புகலியில் வித்தகர் போல

 

புகலி: சீகாழி; வித்தகர்: வித்தகரான ஞான சம்பந்தர்;

அமிர்த கவித் தொடை பாட

 

கவித் தொடை: கவிமாலை;

அடிமை தனக்கு அருள்வாயே

 

 

சமரில் எதிர்த்த சுர் மாள

 

சமரில்: போரில்; சுர்: சூர், சூரன் குறுக்கல் விகாரம்;

தனி அயில் விட்டு அருள்வோனே

 

தனி: ஒப்பற்ற; அயில்: கூர்மை, அதனால் கூரிய வேல்;

நமசிவயப் பொருளானே

 

பொருளோனே: மூலப் பொருளே

ரசத கிரி பெருமாளே.

 

ரசத(ம்): வெள்ளி; ரசதகிரி: வெள்ளி அம் கிரி, கயிலாயம்;

</p><p align="justify"><strong><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/271213551&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></strong></p><p align="justify"><strong>புமிய தனிற் ப்ரபுவான</strong> ... இந்தப் புவிமண்டலத்தின் அரசராகத்—தனிப்பெரும் தலைவராக;</p><p align="justify"><strong>புகலியில் வித்தகர்போல</strong> ... சீகாழியில் அவதரித்த திருஞான சம்பந்தரைப் போல,</p><p align="justify"><strong>அமிர்தகவித் தொடைபாட</strong> ... (மரணமில்லாப் பெருவாழ்வைத் தரவல்ல) அமிர்தம் ததும்பும் வாக்கால் கவிமாலைகளைப் பாடும் திறனை,</p><p align="justify"><strong>அடிமைதனக்கு அருள்வாயே</strong> ... அடிமையாகிய அடியேனுக்கும் அருள வேண்டும்.</p><p align="justify"><strong>சமரிலெதிர்த்த சுர் மாள</strong> ... போரில் எதிர்த்து நின்ற சூரன் இறந்துபடும்படியாக,<strong /></p><p align="justify"><strong>தனியயில்விட்டு அருள்வோனே</strong> ... ஒப்பற்ற வேலாயுதத்தை ஏவியவனே! <strong /></p><p align="justify"><strong>நமசிவயப் பொருளானே</strong> ... நமசிவய என்ற ஐந்தெழுத்தின் மூலப் பொருளாக விளங்குபவனே! <strong /></p><p align="justify"><strong>ரசதகிரிப் பெருமாளே.</strong> ... வெள்ளியங்கிரியான கயிலைமலையில் வீற்றிருக்கும் பெருமாளே!</p><p align="justify"><strong><em>சுருக்க உரை</em></strong></p><p align="justify"><em>போரில் எதிர்த்துவந்த சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்கள் மாளும்படியாக ஒப்பற்ற வேலாயுதத்தைச் செலுத்தியவனே!  ‘நமசிவய’ என்ற ஐந்தெழுத்து மந்திரத்தின் மூலப் பொருளே!  வெள்ளியங்கிரியான கயிலை மலையில் வீற்றிருக்கும் பெருமாளே!</em></p><p align="justify"><em>இந்த பூமண்டலத்துக்குத் தலைவனாக சீகாழித் தலத்தில் தோன்றிய திருஞான சம்பந்தரைப் போல அமுதமயமான சொற்களால் கவிமாலை தொடுப்பதற்கான ஆற்றலை அடிமையாகிய எனக்கும் அருளவேண்டும்.</em></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.