முகப்பு
தமிழ்நாடு

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Updated On : 12 ஏப்ரல், 2026 at 5:46 PM
எடப்பாடி பழனிசாமி.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 5:37 PM

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினத்தில் தேஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசுகையில், மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் என்னைப் பற்றியே பேசுகிறார். என்னைப் பற்றி அவதூறாக பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் முதல்வர். அதிமுக தொண்டன் கூட யாருக்கும் அடிமை கிடையாது, கட்டதுரை திருந்துவதாக தெரியவில்லை.

திமுகவை ஒழிப்பதற்காகவே தொடங்கப்பட்ட கட்சி அதிமுக. திமுகவில் கருணாநிதி குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் உயர் பதவிக்கு வர முடியாது. ஜனநாயகம் உள்ள கட்சி என்றால் அது அதிமுகதான். அதிமுகவை அழிக்க யார் நினைத்தாலும் அவர்கள் அழிந்து போவார்கள். புதுப்பொலிவுடன் அதிமுக தேர்தலைச் சந்திக்கிறது.

Advertisement

தமிழர்களின் நலனை விட்டுக்கொடுத்து இரட்டை வேடம் போடும் திமுக. மீத்தேன் திட்டத்துக்கு ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின், விவசாயிகளின் நிலத்தை மீட்டு கொடுத்தது அதிமுக. டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம். நான் முதல்வரானால் விவசாயிகளுக்கு எந்த துன்பமும் இருக்காது என்றார்.

summary

"AIADMK General Secretary Edappadi Palaniswami has stated that the AIADMK is facing the election with a fresh look.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.