அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம்
அதிமுக மாவட்ட செயலாளர்களில் மேலும் இருவரை நீக்கம் செய்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்களில் மேலும் இருவரை நீக்கம் செய்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சா்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பிலான எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனா்.
இதையடுத்து கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அணியினா் மற்றும் தொடா்புடையவா்களை கட்சிப் பதவியிலிருந்து அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அண்மையில் நீக்கினாா்.
Advertisement
இதுவரை 26 மாவட்டச் செயலாளர்களை நீக்கியிருந்த நிலையில், மேலும் இருவரை நீக்கி எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி அதிமுகவில் இருந்து புதுக்கோட்டை தெற்கு, தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
Former Chief Minister and AIADMK General Secretary Edappadi K. Palaniswami has announced the removal of two more AIADMK district secretaries.