பகுதி - 285
பாண்டியனுக்கு நெடுநாளாக இருந்த கூனலும் பின்னால் வந்த ஜுரமும் பஞ்சாகப் பறக்கும்படியும்; வாதிட்டு நின்ற சமண ஊமையர், அவர்கள் கையில் பற்றிய
பதச் சேதம் | சொற் பொருள் |
வஞ்சக லோப மூடர் தம் பொருள் ஊர்கள் தேடி மஞ்சரி கோவை தூது பல பாவின் Advertisement
| லோப: கருமியர்; பொருள் ஊர்கள்: பொருளையும் ஊர்களையும்; மஞ்சரி, கோவை தூது: சிற்றிலக்கிய வகைகள்; |
வண் புகழ் பாரி காரி என்று இசை வாது கூறி வந்தியர் போல வீணில் அழியாதே
| வண் புகழ்: வள்ளல் தன்மையால் புகழடைந்த; இசை: புகழ்; வாது கூறி: சபதப் பேச்சுகளை சொல்லி; வந்தியர்: அரச சபையில் புகழ் பாடுபவர்கள்; |
செம் சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை திண் திறல் வேல் மயூர முகம் ஆறும்
| நீபம்: கடப்ப (மாலை); மயூரம்: மயில்; |
செம் தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானம் ஊறு செம் கனி வாயில் ஓர் சொல் அருள்வாயே
|
|
பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு பஞ்சு அற வாது கூறு சமண் மூகர்
| பஞ்சவன்: பாண்டியன்; நீடு கூனும்: நெடுநாளாக இருந்த கூனலும்; ஒன்றிடு தாபம்: பின்னால் வந்து சேர்ந்த ஜுரமும்; பஞ்சற: பஞ்சாகப் பறக்க; வாது கூறும்: வாதிடும்; சமண் மூகர்: சமண ஊமையர்; |
பண்பு அறு பீலியோடு வெம் கழு ஏற ஓது பண்டித ஞான நீறு தருவோனே
| பண்பறு: மேன்மை அழிந்த; பீலி: மயிற்பீலி (சமணர் வைத்திருப்பது); பண்டித: ஞான பண்டிதரான திருஞான சம்பந்தராக அவதரித்த முருகன்; |
குஞ்சரம் யாளி மேவும் பைம் புனம் மீது உலாவு குன்றவர் சாதி கூடி வெறி ஆடி
| குஞ்சரம்: யானை; பைம்புனம்: பசுமையான தினைப்புனம்; குன்றவர் சாதி: மலை வேடர்கள்; |
கும்பிட நாடி வாழ்வு தந்தவரோடு வீறு குன்று தொறாடல் மேவு பெருமாளே.
| அவரோடு வீறு: அவர்களோடு விளங்கும்; |
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/270150367&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"><strong>வஞ்சக லோப மூடர்</strong> ... வஞ்சர்களும் கருமியருமான மூடர்களுடைய,</p><p align="justify"><strong>தம்பொரு ளூர்கள் தேடி</strong> ... பொருளுக்காக அவர்களுடைய ஊர்களைத் தேடிச் சென்று,</p><p align="justify"><strong>மஞ்சரி கோவை தூது பலபாவின்</strong> ... மஞ்சரி, கோவை, தூது முதலிய சிற்றிலக்கியங்களில் பல பாடல்களால்,</p><p align="justify"><strong>வண்புகழ் பாரி காரி யென்றிசை வாது கூறி</strong> ... வள்ளல் தன்மையால் பெரும்புகழடைந்த பாரியென்றும் காரியென்னும் அவர்களைப் புகழ்ந்து சூளுரைத்துப் பேசி,</p><p align="justify"><strong>வந்தியர் போல வீணிலழியாதே</strong> ... அரச சபையில் வந்தித்துப் பாடுவதற்கே பணியில் அமர்த்தப்பட்டுள்ளவர்களைப் போல வீணாக அழிந்து போகாமல்,</p><p align="justify"><strong>செஞ்சரண் நாத கீத கிண்கிணி நீப மாலை</strong> ... சிவந்த திருப்பாதங்களையும்; நாதத்தை உடையதான கிண்கிணியையும்; கடப்ப மலர்மாலையையும்;</p><p align="justify"><strong>திண்டிறல் வேல்மயூர முகமாறும்</strong> ... உறுதியானதும் ஆற்றல் வாய்ந்ததுமான வேலையும்; மயிலையும்; ஆறுமுகங்களையும்,</p><p align="justify"><strong>செந்தமிழ் நாளு மோதி உய்ந்திட</strong> ... தினந்தோறும் செந்தமிழால் பாடி வாழ்வைப் பெற,</p><p align="justify"><strong>ஞானமூறு செங்கனி வாயிலோர்சொல் அருள்வாயே</strong> ... ஞானம் ஊறுவதான உன்னுடைய சிவந்த கோவைக்கனி போன்ற திருவாயால் ஒரு மொழியைச் சொல்லியருள வேண்டும்.</p><p align="justify"><strong>பஞ்சவன் நீடு கூனும் ஒன்றிடு தாபமோடு</strong> <strong>பஞ்சற</strong>... பாண்டியனுக்கு நீண்ட நாட்களாக இருந்த கூனையும், பின்னால் வந்து சேர்ந்த சுரத்தையும் பஞ்சாய்ப் பறக்கச் செய்து;</p><p align="justify"><strong>வாது கூறு சமண்மூகர்</strong> ... வாதத்தில் இறங்கினாலும் முழுமையாகப் பேச முடியாத ஊமைகளான சமணர்கள் தங்களுடைய,</p><p align="justify"><strong>பண்பறு பீலி யோடு வெங்கழு வேற</strong> ... மேன்மை அழிந்த மயிற்பீலியோடு கழுவில் ஏறும்படியாக,</p><p align="justify"><strong>ஓது பண்டித ஞான நீறு தருவோனே</strong> ... பதிகங்களைப் பாடியும் ஞானத் திருநீற்றைத் தந்தும் நின்றவரான திருஞான சம்பந்தராக அவதரித்தவனே!</p><p align="justify"><strong>குஞ்சரம் யாளி மேவு பைம்புன மீது லாவு</strong> ... யானைகளும் யாளிகளும் இருப்பதான பசிய தினைப்புனத்திலே உலவுபவர்களான,</p><p align="justify"><strong>குன்றவர் சாதி கூடி வெறியாடி</strong> ... மலை வேடர் கூட்டங்கள் ஒன்றாகக் கூடி, வெறியாட்டம் ஆடி,</p><p align="justify"><strong>கும்பிட நாடி வாழ்வு தந்து அவரோடு</strong> <strong>வீறு</strong>... உன்னை வணங்கவும், அவர்கள் நாடிய வாழ்வைத் தந்து, அவர்களோடு ஒன்றாக விளங்கி,</p><p align="justify"><strong>குன்றுதோ றாடல் மேவு பெருமாளே.</strong> ...குன்று தோறும் திருவிளையாடல் புரிந்தருளும் பெருமாளே!</p><p align="justify"><em>சுருக்க உரை</em></p><p align="justify"><em>பாண்டியனுக்கு நெடுநாளாக இருந்த கூனலும் பின்னால் வந்த ஜுரமும் பஞ்சாகப் பறக்கும்படியும்; வாதிட்டு நின்ற சமண ஊமையர், அவர்கள் கையில் பற்றிய மயிற்பீலியோடு கழுமரத்தில் ஏறும்படியும்; தேவாரப் பதிகங்களைப் பாடியும்; திருநீற்றின் புகழினைப் பரப்பியும் நின்ற திருஞான சம்பந்தராக அவதரித்தவனே! யானையும் யாளியும் இருக்கும் தினைப்புனத்தில் ஒன்றுகூடும் வேடுவர்கள் வெறியாடி உன்னைத் துதிக்க, அவர்கள் விரும்பும் வாழ்வைத் தந்து—அவர்களுடைய குலமகளான வள்ளியை மணந்து—மலைகள் தோறும் விளையாடல் புரியும் பெருமாளே!</em></p><p align="justify"><em>வஞ்சகர்களையும் கருமியர்களையும் அவர்களுடைய பொருளுக்காகத் தேடிச் சென்று, பலவிதமான தமிழ்ப் பாவினங்களால்—புகழ்வதற்கென்றே அரச சபையில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள வந்தியர்களைப் போல—அவர்களைப் பாரி என்றும் காரி என்றும் புகழ்ந்துபாடி, அழிந்து போகாமல்,</em></p><p align="justify"><em>உன்னுடைய சிவந்த திருவடிகளையும்; அதில் ஒலிக்கும் கிண்கிணியையும்; கடப்ப மாலையையும்; வலிய வேலையும்; மயிலையும்; ஆறு திருமுகங்களையும் செந்தமிழ்ப் பாக்களால் நான் என்றென்றும் பாடி உய்ந்திடுமாறு நீ உன்னுடைய கனிவாயால் ஒப்பற்ற உபதேசச் சொல்லை எனக்கு போதித்து அருள வேண்டும்.</em></p>