பகுதி - 288
குன்றுதோறாடல் பாடல்களாக உள்ள ஐந்து பாடல்களில் மூன்றாவதாக இன்றைய பாடலைப் பார்க்கிறோம்.
குன்றுதோறாடல் பாடல்களாக உள்ள ஐந்து பாடல்களில் மூன்றாவதாக இன்றைய பாடலைப் பார்க்கிறோம். ‘உன் பாதத் தாமரையைத் தந்தருள்வாய்’ என்று திருவடியைப் பெறுதலைக் கோருகிறது. கடைசியடியில் ‘கொந்துசேர் சோலை மேவிய குன்று’ என்பதால் இதைப் பழமுதிர்ச் சோலையாகவும் கொள்ள இடமிருக்கிறது. சோலை மேவிய குன்று என்பது இத்தலத்தையும் குறிக்கலாம். ஆனால் தெளிவாகக் ‘குன்றுதோறாடல் மேவிய பெருமாளே’ என்று முடிவதால் இது குன்றுதோறாடல் பாடல்களின் வரிசையிலே வைக்கப்படுகிறது.
தந்தனா தான தானன தந்தனா தான தானன
தந்தனா தான தானன தனதான
வஞ்சமேகோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய
வண்கணா ரார வாரமு மருள்வோராய்
வம்பிலே வாது கூறிகள் கொஞ்சியே காம லீலைகள்
வந்தியா ஆசை யேதரு விலைமாதர்
பஞ்சமா பாவ மேதரு கொங்கைமேல் நேச மாய்வெகு
பஞ்சியே பேசி நாடொறு மெலியாதே
பந்தியாய் வானு ளோர்தொழ நின்றசீ ரேகு லாவிய
பண்புசேர் பாத தாமரை யருள்வாயே
அஞ்சவே சூர னானவ னுய்ஞ்சுபோ காம லேயயில்
அன்றுதா னேவி வானவர் சிறைமீள
அன்பினோ டேம னோரத மிஞ்சமே லான வாழ்வருள்
அண்டர்கோ வேப ராபர முதல்வோனே
கொஞ்சவே காலின் மேவிச தங்கைதா னாட ஆடிய
கொன்றையா னாளு மேமகிழ் புதல்வோனே
கொந்துசேர் சோலை மேவிய குன்றுசூழ் வாக வேவரு
குன்றுதோ றாடல் மேவிய பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/270151608&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>