முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 183

யாகங்களின் தலைவனும், வலாசுரனை வதைத்தவனுமான இந்தின் மகிழ்ச்சியடையும் அழகனே!

Updated On : 17 மார்ச், 2016 at 11:20 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:18 PM

பதச் சேதம்

சொற் பொருள்

அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகம் ஆகி அகரம்: எழுத்தின் முதல்; அதிபன்: தலைவன்; அதிகம்: (அனைத்துக்கும்) மேம்பட்டவன்; அகம்: ‘நான்’ ஆகிய உட்பொருள்;
அயன் என ஆகி அரி என ஆகி அரன் என ஆகி அவர் மேலாய் அயன்: பிரமன்; அரி: திருமால்; அரன்: சிவன்;
இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே இகரம்: இ-கரம்— அண்மையில் இருப்பதாகிய அனைத்தும்; எவைகளும்: எல்லாமும்;
இரு நிலம் மீதில் எளியனும் வாழ எனது முன் ஓடி வரவேணும் இருநிலம்: பெரிய நிலம்—பூமி;
மக பதி ஆகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே மகபதி: மகம்—யாகம்; நூறு அசுவமேதங்களைச் செய்து இந்திர பதவி அடைந்ததால் யாகங்களின் தலைவன்; மருவும்: விளங்கும்; வலாரி: வலன் என்ற அசுரனைக் கொன்றவன்—இந்திரன்;
வனம் உறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே வனம் உறை வேடன்: அந்திமான் என்னும் கதிர்காமத் தலத்து வேடன் (விளக்கத்தை நேற்றைய தவணையில் காணவும்);
செககண சேகு தகுதிமி தோதி திமி என ஆடு மயிலோனே செககண சேகு: ஒலிக்குறிப்புகள்
திரு மலிவான பழமுதிர் சோலை மலை மிசை மேவும் பெருமாளே. திரு: செல்வம்; மலிவான: நிறைந்ததான;

</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/252123338&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><strong>அகரமும் ஆகி</strong> ... ‘அகர முதல எழுத்தெல்லாம்’ என்று குறளிலே சொல்லப்பட்டது போல எழுத்துகளுக்கும் (ஆதிபகவன் முதற்றே உலகு என்பதுபோல உலகுக்கெல்லாம்) முதன்மையாகி;</p><p align="JUSTIFY"><strong>அதிபனும் ஆகி</strong> ... அனைத்துக்கும் தலைவனாகி;</p><p align="JUSTIFY"><strong>அதிகமும் ஆகி</strong> ... எதற்கும், எல்லோருக்கும் மேற்பட்டவனாகி;</p><p align="JUSTIFY"><strong>அகமாகி</strong> ... ஒவ்வொருக்கும் உள்ளே உறைவதான ‘நான்’ என்னும் பொருளாகி;</p><p align="JUSTIFY">(<em>நானெனும் பொய்யை நடத்துவோன் நான்—பாரதி</em>)</p><p align="JUSTIFY"><strong>அயனென வாகி</strong> ... பிரமனாகி, படைப்புத் தொழில் செய்து;</p><p align="JUSTIFY"><strong>அரியென வாகி</strong> ... திருமாலாகிக் காத்து;</p><p align="JUSTIFY"><strong>அரனென வாகி</strong> ... ருத்திர மூர்த்தியாகி அனைத்தையும் அழித்து;</p><p align="JUSTIFY"><strong>அவர் மேலாய்</strong> ... இந்த மூவருக்கும் மேற்பட்ட பொருளாகி;</p><p align="JUSTIFY"><strong>இகரமும் ஆகி</strong> ... இங்கே—அருகிலே—உள்ள பொருட்களாகி;</p><p align="JUSTIFY"><strong>எவைகளும்ஆகி</strong> ... எல்லா இடங்களிலும் உள்ளவையும் ஆகி;</p><p align="JUSTIFY"><strong>இனிமையும் ஆகி</strong> ... இனிமையே வடிவெடுத்தவனாகி;</p><p align="JUSTIFY"><strong>வருவோனே</strong> ... வருபவனே</p><p align="JUSTIFY"><strong>இருநில மீதில்</strong> ... பெரியதாகிய இந்தப் புவியில்,</p><p align="JUSTIFY"><strong>எளியனும் வாழ</strong> ... எளியேனான அடியேனும் வாழும்படியாக</p><p align="JUSTIFY"><strong>எனதுமுன் ஓடி வரவேணும்</strong> ... என் முன்னே ஓடோடி வரவேண்டும்.</p><p align="JUSTIFY"><strong>மகபதி ஆகி</strong> ... வேள்விகளின் தலைவனானவனும்;</p><p align="JUSTIFY"><em>(மகம் என்றால் வேள்வி.  நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்பவன் இந்திர பதவி பெறுகிறான்.  எனவே இந்திரன் வேள்வியின் தலைவன் எனப்படுகிறான்)</em></p><p align="JUSTIFY"><strong>மருவும் வலாரி</strong> ... (பகைவனாக) விளங்கிய வலன் என்ற அசுரனை வதைத்தவனுமான இந்திரனுக்கு,</p><p align="JUSTIFY"><strong>மகிழ் களி கூரும்</strong> ... மகிழ்ச்சியையும் களிப்பையும் உண்டாக்குகின்ற,</p><p align="JUSTIFY"><strong>வடிவோனே</strong> ... அழகான வடிவத்தைக் கொண்டவனே!</p><p align="JUSTIFY"><em>(தேவானையின் தகப்பன் என்ற முறையிலே இந்திரனும் இன்னொரு மாமன்தானே.)</em></p><p align="JUSTIFY"><strong>வனமுறை வேடன்</strong> ... காட்டில் வசித்த (அந்திமான் என்ற) வேடன்</p><p align="JUSTIFY"><em>(பிரமன் சாபம்பெற்று கதிர்காமத்தில் அந்திமான் என்ற வேடனாகப் பிறந்த செய்தியை நேற்று பார்த்தோம்.)</em></p><p align="JUSTIFY"><strong>அருளிய பூஜை மகிழ்</strong> ... செய்த பூசையால் மகிழ்ந்தவனே!</p><p align="JUSTIFY"><strong>கதிர்காமம் உடையோனே</strong> ... (அந்த வேடன் வாழ்ந்த) கதிர்காமத்தை உன் தலமாகக் கொண்டவனே!</p><p align="JUSTIFY"><strong>செககண சேகு தகுதிமி தோதி திமி</strong> <strong>என</strong>... என்ற தாளத்தோடு<br /><br /><strong>ஆடு மயிலோனே</strong> ... ஆடுகின்ற மயிலை வாகனமாகக் கொண்டவனே!</p><p align="JUSTIFY"><strong>திருமலிவான</strong> ... செல்வமும் மங்களகரமும் நிறைந்த,</p><p align="JUSTIFY"><strong>பழமுதிர்சோலை மலை மிசை</strong> ... பழமுதிர்சோலையாம் மலையின் மேலே<br /><br /><strong>மேவு பெருமாளே.</strong> ... வீற்றுள்ள பெருமாளே!</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><strong><em>சுருக்க உரை</em></strong></p><p align="JUSTIFY"><em>யாகங்களின் தலைவனும், வலாசுரனை வதைத்தவனுமான இந்தின் மகிழ்ச்சியடையும் அழகனே! கதிர்காமத்தில் வேடனாகப் பிறந்த பிரமன் செய்த பூசைகளால் மகிழ்ந்து அவனுக்கருள் செய்தவனே!  ஆடும் மயில் வாகனனே!  செல்வமும் மங்களகரமும் நிறைந்த பழமுதிர்சோலையில் வீற்றிருக்கும் பெருமாளே!</em></p><p align="JUSTIFY"><em>எழுத்துகளுக்கு அகரத்தைப் போல எல்லாப் பொருட்களுக்கும் முதற்பொருளாகி; எதற்கும் மேம்பட்டதாகி; ஒவ்வொருள்ளும் இருப்பதான ‘நான்’ என்னும் பொருளாகி; பிரமனாகிப் படைத்து; திருமாலாகிக் காத்து; ருத்திரனாகி அழித்து; இம்மூவர்க்கும் மேலான பொருளுமாகி; அருகில் இருப்பவையும்; தொலைவிலும் மற்ற எல்லா இடங்களிலும் இருப்பவையுமான எல்லாமும் ஆகி நிற்பவனே!  இனிமையே வடிவெடுத்தவனே! இந்தப் பெரிய உலகிலே எளியேனான அடியவன் வாழும்படியாக என்முன்னே விரைந்து வரவேண்டும்.</em></p><p> </p>

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.