பகுதி - 185
வேதங்களில் ஊடாடிக் கலந்திருப்பரான பிரமன் அஞ்சி ஓடும்படியும்; மூதேவி விலகி ஓடும்படியும்;
பதச் சேதம் | சொற் பொருள் |
கரி புராரி காம ஆரி திரி புரம் ஆரி தீ ஆடி கயிலையாளி காபாலி கழை யோனி Advertisement
| கரி புராரி: யானையின் உடலை அழித்தவர்; காமன்: மன்மதன்; ஆரி: பகைவர்; திரிபுராரி: திரிபுரங்களை அழித்தவர்; தீயாடி: வடவமுகாக்கினியே அபிஷேகம் என்று கொள்பவர்*; கயிலையாளி: கயிலை மலையை உடையவர்; காபாலி: கபாலத்தைக் கையில் ஏந்தியவர்; கழையோனி: மூங்கிலுக்கு அடியில் தோன்றியவர்; |
கர உதாசன ஆசாரி பரசு பாணி பானாளி கணமொடு ஆடி கா யோகி சிவ யோகி
| கர: கையில்; உதாசன(ஹுதாசன): அக்கினி(யை); ஆசாரி: ஆசார்யர், குருநாதர்; பரசு: மழு, கோடரி; பாணி: கை(யில் ஏந்தியவர்); பானாளி: நள்ளிருளை உகப்பவர்; கணம்: பூதகணங்கள்; கா யோகி: யோகத்தை உடலாகக் கொண்டவர்; |
| பரம யோகி மா யோகி பரி அரா ஜடா சூடி பகர் ஒணாத மா ஞானி பசு ஏறி | பரி: பெரிய; அரா: பாம்பை; ஜடாசூடி: சடையில் சூடியவர்; பகரொணாத: சொல்லமுடியாத; பசு ஏறி: விடையை ஊர்தியாகக் கொண்டவர்; |
பரதம் ஆடி கான் ஆடி பர(ம) வயோதிக அதீத பரம ஞான ஊர் பூத அருளாயோ
| பரதம் ஆடி: பரத நாட்டியமாடுபவர்; கானாடி: (சுடு)காட்டில் ஆடுபவர்; பரவயோதிக அதீத: மூப்பைக் கடந்தவர்; பரம(ன்): சிவபெருமான்; ஞான ஊர்: ஞான நிலை; பூத: புகுத, புக, நுழைய; |
| சுருதி ஆடி தாதா வி வெருவி ஓட மூதேவி துரக கோப மீது ஓடி வட மேரு | சுருதி: வேதம்; சுருதியாடி தாதா: வேதங்களின் ஊடே கலந்துள்ள (பிரமன்); வி: மிக; வெருவி: அஞ்சி; துரக: விலக, அகல; |
சுழல வேலை தீ மூள அழுது அளாவி வாய் பாறி சுர(த்)தினோடு சூர் மாள உலகு ஏழும்
| வேலை: கடல்; அழுது அளாவி: அழுகை கலந்து; வாய் பாறி: வாய் கிழிந்து; சுரதினோடு: சுரத்தினோடு என்பதன் மெலித்தல் விகாரம்; ஓசையோடு; ச |
| திகிரி மாதிர ஆவார திகிரி சாய வேதாள திரளினோடு பாறோடு கழுகு ஆட | திகிரி: வட்ட; மாதிர: திசை; ஆவார: மறைக்கின்ற; திகிரி: சக்ரவாளகிரி; வேதாளம்: பூதங்கள்; பாறு: பருந்து; |
| செருவில் நாடு வான் நீப கருணை மேருவே பார திரு விராலியூர் மேவு பெருமாளே. | செரு: போர்; வான்: உயர்ந்த; நீப: கடப்ப(மாலை); பார: கனத்த பெருமையை உடைய; |
* சேமவட வாம்புயப் பரணசங் காபரண என்று வேல்விருத்தத்தின் எட்டாம் பாடலில் சொல்லப்படுவதைக் காணவும். வடவமுகாக்கினியே அவருடைய திருமஞ்சன நீர்.
</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/252291305&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><strong>கரிபுராரி</strong> ... யானையை அழித்து (உரித்து அதன் தோலைப் போர்த்துக் கொண்டவர்);</p><p align="JUSTIFY"><strong>காமாரி</strong> ... மன்மதனுக்குப் பகைவனாகி அவனை எரித்தவர்;</p><p align="JUSTIFY"><strong>திரிபுராரி</strong> ... திரிபுரங்களை அழித்தவர்;</p><p align="JUSTIFY"><strong>தீயாடி</strong> ... வடவமுகாக்கினியை அபிஷேகமாகக் கொள்பவர் (அல்லது தீயை ஏந்திக் கொண்டு ஆடுபவர்)</p><p align="JUSTIFY"><strong>கயிலையாளி</strong> ... கயிலை மலையின் இறைவர்;</p><p align="JUSTIFY"><strong>காபாலி</strong> ...பிரம்ம கபாலத்தைக் கையில் ஏந்தியவர்;</p><p align="JUSTIFY"><strong>கழையோனி</strong> ... மூங்கிலின் கீழே தோன்றியவர்;</p><p align="JUSTIFY"><em>(மூங்கிலுக்கு அடியில் சுயம்புவாகத் தோன்றியதால் வேய்முத்தர் என்ற பெயரை உடையவர்)</em></p><p align="JUSTIFY"><strong>கர உதாசன ஆசாரி</strong> ... கையிலே அக்கினியை ஏந்திய ஆசார்யர், குருநாதர்;</p><p align="JUSTIFY"><strong>பரசு பாணி</strong> ... கோடரியைக் கையில் ஏந்திருப்பவரும்</p><p align="JUSTIFY">(<em>பரசுவை ஏந்திய ராமன் பரசுராமன்)</em></p><p align="JUSTIFY"><strong>பானாளி</strong> ... நள்ளிருளை உகப்பவர்;</p><p align="JUSTIFY"><strong>கணமொடாடி</strong> ... பூதகணங்களோடு சேர்ந்துகொண்டு ஆடுபவர்;</p><p align="JUSTIFY"><strong>காயோகி சிவயோகி</strong> ... யோகத்தையே உடலாகக் கொண்டவர்; சிவயோகி;</p><p align="JUSTIFY"><em>(கா யோகி என்பதைக் கா(ய) யோகி என்றும்; பஞ்சபூதங்களில் கலந்த யோகி என்றும்; காய்கின்ற — அழிக்கின்ற — யோகி என்றும் பொருள்கொள்ள முடியும்)</em></p><p align="JUSTIFY"><strong>பரம யோகி மாயோகி</strong> ... பரம யோகி; மஹா யோகி;</p><p align="JUSTIFY"><strong>பரி அரா ஜடாசூடி</strong> ... பெரிய பாம்பை சடாமுடியில் சூடியவர்</p><p align="JUSTIFY"><em>(பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக்குறின் —குறள். பரியது: பெரியது)</em></p><p align="JUSTIFY"><strong>பகரொணாத மாஞானி</strong> ... (வார்த்தையாலே விவரித்துச்) சொல்ல முடியாத பெரிய ஞானி;</p><p align="JUSTIFY"><strong>பசுவேறி</strong> ... ரிஷப வாகனர்;</p><p align="JUSTIFY"><strong>பரதம் ஆடி கானாடி</strong> ... பரதம் ஆடுபவர்; சுடுகாட்டிலே நடனமாடுபவர்;</p><p align="JUSTIFY"><strong>பர வயோதிக அதீத</strong> ... மேலானவர்; மூப்பைக் கடந்தவர்; <em>(இத்தனைக்கும் உரியவரான)</em></p><p align="JUSTIFY"><strong>பரம ஞானவூர்</strong> ... பரமசிவனுடைய ஞான நிலைக்குள்,</p><p align="JUSTIFY"><strong>பூத அருளாயோ</strong> ... அடியேன் புகுமாறு முருகா, நீ அருள வேண்டும்.</p><p align="JUSTIFY"><strong>சுருதி யாடி தாதா</strong> ... வேதங்களிலே ஊடாடிக் கலந்தவரான பிரமன்</p><p align="JUSTIFY"><strong>வி வெருவி யோட</strong> ... மிகவும் அஞ்சி ஓடவும்;</p><p align="JUSTIFY"><strong>மூதேவி துரக</strong> ... மூதேவி விலகி ஓடவும்;</p><p align="JUSTIFY"><strong>கோப மீதோடி வடமேரு சுழல</strong> ... கோபம் மிகுவதால் வடக்கேயுள்ள மேருமலை சுழலவும்;</p><p align="JUSTIFY"><strong>வேலை தீமூள</strong> ... கடலிலே தீப்பற்றிக் கொள்ளவும்;</p><p align="JUSTIFY"><strong>அழுது அளாவி வாய்பாறி சுரதினோடு சூர் மாள</strong> ... ஓயாத அழுகை கலப்பதனால் (அழுது அழுது) வாய்கிழிந்து, அழுகையோசையோடு சூரன் மாயவும்;</p><p align="JUSTIFY"><strong>உலகேழும்</strong> ... ஏழு உலகங்களோடு</p><p align="JUSTIFY"><strong>திகிரி மாதிர ஆவார திகிரி சாய</strong> ...திசைகளை மறைக்கும் வட்டமான சக்ரவாளகிரியானது சாயவும்</p><p align="JUSTIFY"><em>(அண்டவெளியின் புற எல்லையாக இருப்பது சக்ரவாளகிரி)</em></p><p align="JUSTIFY"><strong>வேதாள திரளினோடு பாறோடு கழுகாட</strong> ... பேய்க்கூட்டங்களோடு பருந்துகளும் கழுகுகளும் ஆடவும்;</p><p align="JUSTIFY"><strong>செருவில் நாடு</strong> ... (அப்படிப்பட்ட) போர்க்களத்தை நாடிச் சென்றவனே!</p><p align="JUSTIFY"><strong>வான் நீப</strong> ... உயர்ந்த, தூய கடம்ப மாலையை அணிந்தவனே!</p><p align="JUSTIFY"><strong>கருணை மேருவே</strong> ... அருளாகிய மேரு மலையே!</p><p align="JUSTIFY"><strong>பார திருவி ராலியூர்மேவு பெருமாளே.</strong> ... கனத்த பெருமையை உடையதான விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே!</p><p align="JUSTIFY"><strong><em><br />சுருக்க உரை</em></strong></p><p align="JUSTIFY"><em>வேதங்களில் ஊடாடிக் கலந்திருப்பரான பிரமன் அஞ்சி ஓடும்படியும்; மூதேவி விலகி ஓடும்படியும்; எழுகின்ற கோபத்தின் விளைவாலே வடமேரு சுழலும்படியும்; கடல் தீப்பற்றிக்கொள்ளவும்; அழுகையால் வாய் கிழிந்துபோய், அழுகையொலியோடு சூரன் மாளவும்; ஏழு உலகங்களையும் திக்குகளையும் மறைக்கின்ற சக்கரவாளகிரி சாயவும்; பேய்க்கூட்டங்களோடு பருந்துகளும் கழுகுகளும் ஆடுகின்ற போர்க்களத்தை நாடிச் சென்றவனே! தூய கடப்ப மாலையை அணிந்தவனே! கருணையாகிய மேரு மலையே! கனத்த பெருமையை உடைய விராலி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே!</em></p><p align="JUSTIFY"><em>யானையை அழித்துத் தோலை உரித்துப் போர்த்தவர்; மன்மதனை எரித்தவர்; திரிபுரத்தை அழித்தவர்; பிரளயகாலத்து அக்கினியையே தன்னுடைய அபிஷேக நீர் என்று கொண்டவர்; கயிலைமலை நாதர்; பிரமகபாலத்தை ஏந்தியவர்; மூங்கிலினடியில் சுயம்புவாய்த் தோன்றியவர்; கையில் நெருப்பை ஏந்தியவர்; குருநாதர்; கோடரியை ஆயுதமாகக் கையில் தரித்தவர்; நடு இரவின் இருட்டை உகப்பவர்; பேய்க்கூட்டங்களோடு ஆடுபவர்; யோகத்தையே உடலாகக் கொண்டவர்; சவியோகி; பரமயோகி; மஹாயோகி; பெரிய பாம்பைச் சடாமுடியில் சூடியவர்; இடப வாகனத்தைக் கொண்டவர்; பரதம் ஆடுபவர்; சுடுகாட்டில் ஆடுபவர்; மேலானவர்; மூப்பைக் கடந்தவர் —இத்தனைக்கும் உரியவரான பரமசிவனாருடைய ஞான நிலைக்குள் நான் புகுமாறு அருள வேண்டும்.</em></p><p> </p>