முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 187

தாங்கள் பின்பற்றும் சமயங்களில் நெறியை மேற்கொண்டு ஒழுகும் பற்பல சமயங்களைச் சேர்ந்தோருடைய கட்டுப்பாடுகளால் சிதறாமலும்;

Updated On : 18 மார்ச், 2016 at 3:17 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:20 PM

பதச் சேதம்

சொற் பொருள்

கமை அற்ற சீர் கேடர் வெகு தர்க்க கோலாலர் களை உற்று மாயாது மந்த்ர வாத

Advertisement

 

கமை: (க்ஷமா) பொறுமை; சீர்கேடர்: ஒழுக்கமற்றவர்; வெகுதர்க்க: அதிகமாகத் தர்க்கம் பேசும்; கோலாலர்: கோலாகலம், ஆடம்பரம் நிறைந்தவர்கள்; களை உற்று: சோர்வடைந்து; மாயாது: மடியாமல்; மந்த்ரவாத: மந்திரவாதங்களைச் செய்யும்;

கடை கெட்ட ஆபாதம் உறு சித்ர கோமாளர் கருமத்தின் மாயாது கொண்டு பூணும்

 

கடைகெட்ட: இழிவு நிலையிலுள்ள; ஆபாதம் உறு: கீழான தன்மையை அடையும்; கோமாளர்: அழகாகப் பேசிக் கொம்மாளம் இடுபவர்கள்; கருமத்தின் மாயாது: செயல்களில் அழியாமல்; கொண்டு பூணும்: மேற்கொண்டு ஒழுகும்;

சமயத்தர் ஆசார நியமத்தின் மாயாது சகளத்து உளே நாளு(ம்) நண்பு உளோர் செய்

 

சமயத்தர்: அந்தந்த சமயத்தைச் சேர்ந்தவர்களுடைய; ஆசார நியமத்தின்: சகளத்து உளே: சகளம்—உருவ வழிபாடு, உருவவழிபாட்டை பேமற்கொண்டு; நண்புளோர்: நட்பு, அன்பு, பக்தி உள்ளோர்;
சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது சலன படா ஞானம் வந்து தாராய் சரியை, கிரியை யோகம் எனப்படும் நியமங்களை மேற்கொண்டு அழியாமல்;

அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம் அது துக்கமே ஆக மிஞ்சிடாமல்

 

அமரில்: போர்க்களத்தில்; சுரா பானம்: கள்; திதி புத்ரர்: (கச்யபர் மனைவியருள்) திதிக்குப் பிறந்தவரான அசுரர்கள் (தேவர் அதிதியின் மக்கள்.  அதிதியின் மகன் என்பதால் ஆதித்யன் என்பது சூரியனுடைய பெயர்); ஆலோகம்: அறியாமை;

அடம் இட்ட வேல் வீர திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம்

 

அடம் இட்ட வேல்: பிடிவாதம் பிடித்த வேல்; அருண: சிவந்த; சிகா: சடை; நீலகண்ட: நீலமான மிடறு; பாரம்: பெருமை

மம பட்ச மா தேவர் அருமை சுவாமீ நிமல நிட்களா மாயை விந்து நாதம்

 

மம: என்னிடம்; பட்ச: அன்புடைய; மாதேவர்: சிவனார்; சுவாமீ: சுவாமியே; நிமல: தூயவனே; நிஷ்களா: உருவமற்றவனே; மாயை விந்து நாதம் வரசக்தி என்னும் இவற்றுக்கு;
வர சத்தி மேலான பர வத்துவே மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே. மேலான: மேற்பட்ட; பரவத்துவே: பர வஸ்துவே, பரம்பொருளே; மேலை வயலி: மேலை வயலூர்;

</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/252551086&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="JUSTIFY"><strong>கமை அற்ற சீர் கேடர் வெகு தர்க்க கோலாலர் களை உற்று மாயாது</strong> ... பொறுமையற்றவர்களும்; ஒழுக்கம் கெட்டவர்களும்; மிகுதியாகத் தர்க்கம் பேசுகின்ற ஆடம்பரவாதிகளுமான பேர்களால் சோர்வடைந்து வீழாமலும்;</p><p align="JUSTIFY"><strong>மந்த்ர வாத கடை கெட்ட ஆபாதம் உறு சித்ர கோமாளர் கருமத்தின் மாயாது</strong> ... மாய மந்திரங்களைச் செய்யும் மிக இழிவான நிலையிலுள்ள தாழ்மையடைந்தவர்களும்; சித்திரமாகப் (அழகாகப்) பேசிக் கொண்டாட்ட கொம்மாளம் போடுபவர்களுமான பேர்களுடைய செயல்களில் சிக்கிக்கொண்டு அழியாமலும்;</p><p align="JUSTIFY"><strong>கொண்டு பூணும் சமயத்தர் ஆசார நியமத்தின் மாயாது</strong> ... தாங்கள் பின்பற்றும் சமயங்களில் நெறியை மேற்கொண்டு ஒழுகும் பற்பல சமயங்களைச் சேர்ந்தோருடைய கட்டுப்பாடுகளால் சிதறாமலும்;</p><p align="JUSTIFY"><strong>சகளத்து உளே நாளு(ம்) நண்பு உளோர் செய் சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது</strong> ... நாள்தோறும் உருவ வழிபாடு செய்து, பக்தியுடன் இருப்பவர்கள் செய்கின்ற சரியை, கிரியை, யோகம் எனப்படும் வழிகளை மேற்கொண்டு மாளாமலும்;</p><p align="JUSTIFY"><em>(சரியை எனப்படுவது, ஆலயங்களுக்கு அலகிடுதல், மெழுகுதல், விளக்கேற்றுதல், நந்தவனம் அமைத்தல், மலர் பறித்தல், மாலை தொடுத்தல் இவற்றைப் போன்ற கைங்கரியங்களைச் செய்வது. [தாத மார்க்கம், சாலோகம்];  கிரியை எனப்படுவது பூசைக்கான உபகரணங்களை அமைத்து அன்றாடக் காரியங்களைச் செய்வது. [புத்ர மார்க்கம், சாமீபம்]; யோகம் எனப்படுவது புலன்களை அடக்கி, பிராணவாயுவை சலனமில்லாது நிறுத்தி தியானத்தில் ஈடுபடுதல் [தோழ நெறி, சாரூபம்]; ஞானம் எனப்படுவது, அக, புறச் செயல்கள் ஏதுமில்லாமல் அறிவுரூபமாகச் செய்யும் வழிபாடு [சன்மார்க்கம், சாயுஜ்யம்] முதல் மூன்றும் வேண்டாது நான்காவதாகிய ஞானத்தைக் கேட்கிறார்.)</em></p><p align="JUSTIFY"><strong>சலனப் படா ஞானம் வந்து தாராய்</strong> ... எந்தவிதமான சலனங்களுக்கும் ஆட்படாத ஞானத்தை என்னிடத்திலே வந்து அருளவேண்டும்.</p><p align="JUSTIFY"><strong>அமரில் சுரா பான திதி புத்ரர் ஆலோகம் அது துக்கமே ஆக மிஞ்சிடாமல்</strong> ... கள்ளைக் குடித்துப் போரில் ஈடுபடுகின்ற (கச்யபர் மனைவியான) திதியின் மக்களான அசுரர்களுடைய அறியாமையானது உலகத்துக்கு ஓயாத துன்பத்தையே தரவும், அந்தத் துன்பத்தை அழித்தே தீருவேன் என்று</p><p align="JUSTIFY"><strong>அடம் இட்ட வேல் வீர</strong> ... பிடிவாதம் பிடித்ததான வேலை ஏந்தியிருக்கும் வீரனே!</p><p align="JUSTIFY"><strong>திருவொற்றியூர் நாதர் அருண சிகா நீல கண்ட பாரம் மம பட்ச மா தேவர் அருமைச் சுவாமீ</strong> ... திருவொற்றியூர் நாதரும்; செம்பட்டை கொண்ட சடாமுடியும், நீலமிடற்றையும் பெருமையையும் உடையவரும்; என்மீது அன்புபூண்டவருமான மகாதேவருடைய அருமை வாய்ந்த சுவாமியே!</p><p align="JUSTIFY"><strong>நிமல நிட்களா மாயை விந்து நாதம் வர சத்தி மேலான பர வத்துவே</strong> ... மாசற்றவனே!  உருவமில்லாதவனே!  மாயை, விந்து, நாதம், வரங்களைத் தரும் சக்தி இவற்றுக்கு மேற்பட்ட பரம்பொருளே!</p><p align="JUSTIFY"><strong>மேலை வயலிக்குள் வாழ் தேவர் தம்பிரானே.</strong> ... மேலை வயலூர் என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே!  தேவர்களுடைய தம்பிரானே!</p><p align="JUSTIFY"><em><br /><strong>சுருக்க உரை</strong></em></p><p align="JUSTIFY"><em>கள்ளைக் குடித்துப் போரில் ஈடுபடுபவர்களும், திதியின் புத்திரர்களுமான அசுரகளுடைய அறியாமை உலகத்துக்குப் பெரிய துக்கத்தை உண்டாக்க, அந்த துக்கத்தையும் அதற்குக் காரணமான அறியாமையைம ஒழித்தே தீருவேன் என்று பிடிவாதம் பிடிப்பதான வேலை ஏந்தியவனே! திருவொற்றியூர் ஈசர்; செம்பட்டை கொண்ட சடாமுடியையும், நீலகண்டத்தையும் என்மீது மாறாத அன்பையும் கொண்டவரான மகாதேவருடைய அருமையான குமாரனே, சுவாமியே!  மாசற்றவனே! உருவமில்லாதவனே!  மாயை, விந்து, நாதம், வரம்தரும் சக்தி ஆகிய இவற்றுக்கெல்லாம் மேற்பட்ட பரம்பொருளே! மேலை வயலூர் என்ற தலத்தில் வீற்றுள்ள தேவர் தம்பிரானே!</em></p><p align="JUSTIFY"><em>பொறுமையற்றவர்களும்; ஒழுக்கக் கேடர்களும்; தருக்கம் பேசித் திரியும் ஆடம்பரம் மிக்கவர்களுமான பேர்வழிகளால் நான் சோர்வுற்று மாளாமலும்; மிக இழிவான நிலையிலுள்ள; தாழ்மை வாய்ந்த, அழகழகாகன — பொய்யான — பேச்சுகளைப் பேசிக் கொம்மாளமிடுபர்களின் செயல்களில் சிக்கிக்கொண்டு அழியாமலும்; தாம் மேற்கொண்டு ஒழுகும் அந்தந்தச் சமயங்களுக்கு உரிய ஆசார நியமங்களில் கட்டுப்பட்டு வீணாகமலும்; உருவ வழிபாட்டில் ஈடுபட்டு பக்தியோடு நாள்தோறும் சரியை, கிரியை, யோகம் எனப்படும் வழிமுறைகளை மேற்கொண்டர்களுடைய வழிகளிலே அகப்படாமலும்; எந்தவிதமான சஞ்சலங்களுக்கும் உட்படாத ஞானத்தை நீ எனக்கு (நேரடியாக வந்து) தந்தருள வேண்டும்.</em></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.