முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 195

அலைவீசுகின்ற கடலில் மாமரமாக நின்ற சூரபதுமனைச் சாய்த்தவனே!  கிரெளஞ்ச மலையைத் தூளடித்தவனே!  தேவலோகத்தில்

Updated On : 29 மார்ச், 2016 at 2:30 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:23 PM

பதச் சேதம்

சொற் பொருள்

தலையை மழித்து சிவந்த துணியை அரைக்கு புனைந்து சடையை வளர்த்து புரிந்து புலி ஆடை அரை: இடுப்பு; சிவந்த துணி: காவித் துணி;
சதிரொடு உவப்ப புனைந்து விரகொடு கற்க புகுந்து  தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு சதிரொடு: பெருமையோடு; விரகொடு: சாமர்த்தியத்தோடு; ஒரு சத்தத்து அறிந்து: ஒலிக்கின்ற குறிப்பை மட்டுமே அறிந்து;
கலையை மிகுத்திட்டு அணிந்து கரண வலைக்குள் புகுந்து கதறு(ம்) நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே கரண வலைக்குள்: புலன்களின் வலைக்குள்; நிலைக்கைக்கு: நிலைமைக்கு;
கனக(ம்) இயற்றி திரிந்து துவளும் எனை சற்று அறிந்து கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே கனகம்: பொன்; இயற்றி: ரசவாதத்தால் செய்து; எனை சற்று அறிந்து: என்னைச் சற்றே கவனித்து;
அலை கடலில் கொக்கு அரிந்தும் அரு வரையை  பொட்டு எறிந்தும் அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனைகொக்கு: மாமரம்; அரிந்து: வெட்டி; அரு வரையை: அரிதான கிரெளஞ்ச மலையை; பொட்டு எறிந்து: தூளடித்து; உயர் ஆனை: பெருமை வாய்ந்த தேவசேனை அம்மைக்கு;
அருளொடு கைப்பற்றி வந்தும் அருண கிரி புக்கிருந்தும் அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே அருணகிரி புக்கு: திருவண்ணாமலையில் புகுந்து;
மலையை வளைத்து பறந்து மருவு புரத்தை சிவந்து வறிது நகைத்திட்டு இருந்த சிவனார் தம் மலையை வளைத்து: மேரு மலையை வில்லாக வளைத்து; பறந்து மருவு புரத்தை: பறக்கும் சக்தியுள்ள திரிபுரங்களை; சிவந்து: கோபித்து; வறிது: சிறிதே; நகைத்திட்டு: சிரித்த;
மதலை புனத்தில் புகுந்து நர வடிவு உற்று திரிந்து மற மயிலை சுற்றி வந்த பெருமாளே. புனம்: தினைப் புனம்; நரவடிவுற்று: மனித வடிவம் கொண்டு; மற மயிலை: வேடர் குலத்துப் பெண்ணை; சுற்றிவந்த: கவர்ந்து வந்த;

</p><p align="JUSTIFY"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/254768648&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><strong>தலையை மழித்துச் சிவந்த துணியை அரைக்குப் புனைந்து</strong>... தலையை மொட்டையடித்துக் கொண்டும்; காவித் துணியை இடுப்பில் தரித்துக் கொண்டும்;</p><p align="JUSTIFY"><strong>சடையை வளர்த்துப் புரிந்து புலி ஆடை</strong> ... சடையை வளர்த்துக் கொண்டும்; புலித்தோல் ஆடையை,</p><p align="JUSTIFY"><strong>சதிரொடு உவப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து</strong> ... பெருமையோடும் மகிழ்ச்சியோடும் அணிந்து கொண்டும்; சாமர்த்தியமாக புதியபுதிய கலைகளைக் கற்கத் தொடங்கியும்;</p><p align="JUSTIFY"><strong>தவம் ஒரு சத்தத்து அறிந்து திருநீறு கலையை மிகுத்திட்டு அணிந்து</strong> ... தவம் என்ற சொல்லை உச்சரிப்பதைத் தவிர அதன் பொருளை உணராமல், உடல் முழுக்கத் திருநீற்றைப் பூசிக்கொண்டும்;</p><p align="JUSTIFY"><strong>கரண வலைக்குள் புகுந்து</strong> ... புலன்கள் விரித்திருக்கும் வலைக்குள் தெரிந்தே புகுந்து அகப்பட்டுக் கொண்டும்;</p><p align="JUSTIFY"><strong>கதறு(ம்) நிலைக்கைக்கு அமர்ந்த எழிலோடே</strong> ...கதறி துக்கப்படும் நிலைக்கு ஆட்பட்ட லட்சணத்தில்;</p><p align="JUSTIFY"><strong>கனக(ம்) இயற்றித் திரிந்து துவளும் எனைச் சற்று அறிந்து</strong> ... ரசவாதத்தால் பொன்னைச் செய்து அலைந்து சோர்ந்துகிடக்கும் என்னையும் சற்றே கவனித்து;</p><p align="JUSTIFY"><strong>கவலை ஒழித்தற்கு இரங்கி அருள்வாயே</strong> ... என் கவலைகளை அழிப்பதற்காக எனக்கு இரக்கப்பட்டு அருளவேண்டும்.</p><p align="JUSTIFY"><strong>அலை கடலில் கொக்கு அரிந்தும்</strong> ... அலைவீசும் கடலிலே மாமரமாக நின்ற சூரபதுமனைப் பிளந்தும்;</p><p align="JUSTIFY"><strong>அரு வரையைப் பொட்டு எறிந்தும்</strong> ... அரிய கிரெளஞ்ச மலையைத் தூளடித்தும்;</p><p align="JUSTIFY"><strong>அமர் உலகத்தில் புகுந்தும் உயர் ஆனை</strong> ... தேவலோகத்தில்புகுந்தும்; பெருமை நிறைந்த தேவானையம்மையைக்கு,</p><p align="JUSTIFY"><strong>அருளொடு கைப்பற்றி வந்தும் அருண கிரி புக்கிருந்தும்</strong> ... அருள்புரிந்து, கைப்பற்றி, திருவண்ணாமலைக்கு வந்து வீற்றிருந்தும்;</p><p align="JUSTIFY"><strong>அறிவு உள பத்தர்க்கு இரங்கும் இளையோனே</strong> ... ஞானம் நிறைந்த பக்தர்களுக்கு இரங்குகின்ற இளையவனே!</p><p align="JUSTIFY"><strong>மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து</strong> ... மேருமலையை வில்லாக வளைத்து; பறக்கும் சக்தியுடைய திரிபுரங்களைச் சினந்து;</p><p align="JUSTIFY"><strong>வறிது நகைத்திட்டு இருந்த சிவனார் தம் மதலை</strong> ... சிறிய புன்னகையால் திரிபுரங்களை எரித்த சிவபெருமானுடைய மகனே!</p><p align="JUSTIFY"><strong>புனத்தில் புகுந்து நர வடிவு உற்றுத் திரிந்து</strong> ... தினைப்புனத்துக்குள் நுழைந்து, அங்கே மனிதவேடம் தரித்து, வள்ளியின்மேல் காதலாகித் திரிந்து,</p><p align="JUSTIFY"><strong>மறமயிலைச் சுற்றிவந்த பெருமாளே.</strong> ... வேடர்குலத்து மயிலான அவளை வளைத்து அபகரித்துக் கொண்டுவந்த பெருமாளே!</p><p align="JUSTIFY"> </p><p align="JUSTIFY"><em>சுருக்க உரை</em></p><p align="JUSTIFY"><em>அலைவீசுகின்ற கடலில் மாமரமாக நின்ற சூரபதுமனைச் சாய்த்தவனே!  கிரெளஞ்ச மலையைத் தூளடித்தவனே!  தேவலோகத்தில் புகுந்து, தேவானையம்மைக்கு அருள்புரிந்து அவளைக் கரம்பற்றி, திருவண்ணாமலைக்கு வந்து வீற்றிருப்பவனே!  ஞானம் நிறைந்த பக்தர்களுக்கு இரங்குகின்ற இளையவனே!</em></p><p align="JUSTIFY"><em>தலையை மொட்டையடித்துக்கொண்டும்; காவியாடையைத் தரித்துக் கொண்டும்; சடையை வளர்த்துக்கொண்டும்; புலித்தோல் ஆடையைப் பெருமையோடும் மகிழ்ச்சியோடும் அணிந்துகொண்டும்; எதையெதையோ கற்க முயன்றுகொண்டும்; தவம் என்பதன் பொருளறியாமல் வெறும் ஒலிக்குறிப்பாக மட்டுமே அறிந்துகொண்டும்; உடல்முழுதும் திருநீற்றைப் பூசிக்கொண்டும்; தெரிந்தே புலன்கள் விரித்த வலைக்குள் விழுந்து வேதனை அடைகின்றவனும்; இரசவாதத்தால் பொன்னை உண்டாக்கிக்கொண்டு திரிகின்றவனுமாகிய என்மீது சற்றே இரக்கம்கொண்டு என் கவலைகளை நீக்கி என்னை ஆட்கொண்டு அருள்வாயாக.</em></p>

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.