முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 238

இன்றைய திருப்புகழ் மிகவும் பிரபலமான ஒன்று.  திருவாவினன்குடித் திருப்புகழ் இது. முருகனுடைய அருளைப் பெறப் பாடியது.  ‘ஆதரம்

Updated On : 5 மே, 2016 at 3:47 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:44 PM

இன்றைய திருப்புகழ் மிகவும் பிரபலமான ஒன்று.  திருவாவினன்குடித் திருப்புகழ் இது. முருகனுடைய அருளைப் பெறப் பாடியது.  ‘ஆதரம் பயில் ஆரூரர் தோழமை’ என்ற கடைசி அடியில் உள்ளதன் வரலாறு பெரிய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

இறைவன் அனுப்பிய வெள்ளை யானையிலேறிக்கொண்டு சுந்தரர் கயிலைக்குச் செல்லும்போது தன் நண்பரான சேரமான் பெருமாள் என்ற சேர அரசனை நினைக்கிறார்.  அவ்வாறு நினைப்பதை அறிந்த சேரமான் பெருமாள் ஒரு குதிரையிலேறிக்கொண்டு, சுந்தரரை அடைந்து அவருடைய யானையை வலம் செய்து, அவருக்கு முன்னால் கயிலையை அடைந்தார்.  ஆனால், இறைவனுடைய ஆணையின்றி வந்த காரணத்தால் அவருக்குக் கதவு திறக்கவில்லை; சுந்தரருக்காகக் காத்திருக்க வேண்டியதாயிற்று. காத்திருக்கும் சமயத்தில் ‘திருக்கயிலாய ஞான உலா’ என்ற நூலை அங்கேயே ஆசுகவியாக இயற்றினார்.  பிறகு சுந்தரர் வந்ததும், அவரோடு சேர்ந்துகொண்டு கயிலையில் பிரவேசித்து, இறைவன் முன்னிலையில் நூலை அரங்கேற்றினார்.  இதைத்தான் அருணகிரியார், ‘ஆதி அந்த உலா ஆசு’ என்று குறிப்பிடுகிறார்.  தமிழிலுள்ள எல்லா உலா நூற்களுக்கும் முதலாவது என்பதால் இதற்கு ‘ஆதி உலா’ என்றும் பெயர்.  பாடலைப் பார்ப்போம்.

தான தந்தன தானான தானன
தான தந்தன தானான தானன
தான தந்தன தானான தானன     தனதான

Advertisement

நாத  விந்துக லாதீந மோநம
     வேத மந்த்ரசொ ரூபாந மோநம
     ஞான பண்டித சாமீந மோநம               வெகுகோடி
  நாம சம்புகு மாராந மோநம
    போக அந்தரி பாலாந மோநம
    நாக பந்தம யூராந மோநம                   பரசூரர்
சேத தண்டவி நோதாந மோநம
     கீத கிண்கிணி பாதாந மோநம
     தீர சம்ப்ரம வீராந மோநம                  கிரிராஜ
  தீப மங்கள ஜோதீந மோநம
    தூய அம்பல லீலாந மோநம
    தேவ குஞ்சரி பாகாந மோநம                அருள்தாராய்
ஈத லும்பல கோலால பூஜையும்
     ஓத லுங்குண ஆசார நீதியும்
     ஈர முங்குரு சீர்பாத சேவையும்             மறவாத
  ஏழ் தலம்புகழ் காவேரி யால்விளை
     சோழ மண்டல மீதேம நோகர
     ராஜ கெம்பிர நாடாளு நாயக               வயலூரா
ஆத ரம்பயி லாரூரர் தோழமை
     சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
     ஆடல் வெம்பரி மீதேறி மாகயி            லையிலேகி
  ஆதி யந்தவு லாவாசு பாடிய
     சேரர் கொங்குவை காவூர்ந னாடதில்
     ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள்        பெருமாளே.

</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/262599114&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.