முகப்பு
கிரிக்கெட்

ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து...

Updated On : 12 ஏப்ரல் 2026, 2:05 pm IST
வெற்றிக்குப் பிறகு தில்லி வீரருடன் பேசும் ருதுராஜ் கெய்க்வாட். உடன் சிஸ்கே வீரர்களும், நடுவரும் வெளியேறத் தயாராகும் காட்சி. - Mahesh Kumar A.
பகிர்:

தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சீசனில் முதல்முறையாக சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் முதல்முறையாக அபராதத்தையும் பெற்றுள்ளது.

நேற்றிரவு சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 212/2 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Advertisement

Advertisement

இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் அதிகமான வேகப் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தியதால், கூடுதல் நேரம் செலவிடப்பட்டது.

முதல்முறையாக இந்த சீசனில் இந்தத் தவறைச் செய்ததால் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த முறையும் இதையே செய்தால் அபராதம் இரட்டிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Csk captain Ruturaj Gaikwad fined Rs 12 lakh for slow over-rate.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments