ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ரூ.12 லட்சம் அபராதம்!
சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து...
தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் முதல்முறையாக சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் முதல்முறையாக அபராதத்தையும் பெற்றுள்ளது.
நேற்றிரவு சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 212/2 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
Advertisement
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியில் அதிகமான வேகப் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தியதால், கூடுதல் நேரம் செலவிடப்பட்டது.
முதல்முறையாக இந்த சீசனில் இந்தத் தவறைச் செய்ததால் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த முறையும் இதையே செய்தால் அபராதம் இரட்டிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.