பகுதி - 241
விண்ணிலுள்ள தேவர்களின் மெலிவுற்ற சேனையின்மேல், வஞ்சினம் உரைத்துக் கூட்டமாகப் போருக்கு வந்த அரக்கர்களுடைய கூட்டம், முன்னும்பின்னுமாகச் சிந்திச்
பதச் சேதம் | சொற் பொருள் |
நாட்டம் தங்கி கொங்கை குவடில் படியாதே Advertisement
| நாட்டம்: விழி, பார்வை; குவடு: திரண்ட, உச்சி(யில்); |
நாட்டும் தொண்டர்க்கு அண்ட கமல பதம் ஈவாய்
| நாட்டும்: நிலைநாட்டுகிற; அண்டம்: உலகம் (உலகமே கிடைக்கும்படியான); |
வாட்டம் கண்டுற்று அண்டத்து அமரப் படை மீதே
| வாட்டம்: மெலிவு; கண்டுற்று: கண்டு அடைந்து; அமரப் படை: தேவர்களுடைய சேனை; |
மாற்றம் தந்து பந்தி சமருக்கு எதிரானோர்
| மாற்றம்: பேச்சு, வஞ்சினம், சூள் பந்தி: வரிசை, கூட்டம்; சமர்: போர்; எதிரானோர்: எதிர்த்தவர்கள்; |
கூட்டம் கந்தி சிந்தி சிதற பொருவோனே
| கந்தி: கந்தித்தல்—முன்னும் பின்னுமாக; |
கூற்றன் பந்தி சிந்தை குணம் ஒத்த ஒளிர் வேலா
| கூற்றன்: யமன்; பந்தி: வரிசை, ஒழுங்கு தவறாத; |
வேட்ட தொந்தி தந்தி பரனுக்கு இளையோனே
| வேட்ட(ம்): வேட்டது, விரும்பியது; தந்தி: யானை; |
வேப்பம் சந்தி கந்த குமர பெருமாளே.
|
|
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/263754574&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"><strong>நாட்டம் தங்கிக் கொங்கைக் குவடில் படியாதே</strong> ... பார்வையும் மனத்தின் நாட்டமும் திரண்ட மார்பகங்களில் தோயாமல்,</p><p align="justify"><strong>நாட்டும் தொண்டர்க்கு அண்டக் கமலப் பதம் ஈவாய்</strong> ... (தங்கள் மனத்தை உன்மீது) நாட்டுகின்ற அன்பர்களுக்கு, உலகையே தரவல்லதான உன் தாமரைப் பாதங்களைத் தந்து அருளவேண்டும்;</p><p align="justify"><strong>வாட்டம் கண்டு உற்று அண்டத்து அமரப் படை மீதே</strong> ... மெலிவடைந்த; வானிலுள்ள தேவர்களின் சேனையின்மேல்,</p><p align="justify"><strong>மாற்றம் தந்து பந்திச் சமருக்கு எதிரானோர்</strong> ... வஞ்சினம் (சூள்) உரைத்து, வரிசையாகப் (கூட்டமாகப்) போருக்கு வந்த அரக்கர்களுடைய,</p><p align="justify"><strong>கூட்டம் கந்திச் சிந்திச் சிதறப் பொருவோனே</strong> ... கூட்டமானது முன்னும் பின்னுமாக சிந்திச் சிதறும்படி போரிடுபவனே!</p><p align="justify"><strong>கூற்றன் பந்திச் சிந்தைக் குணம் ஒத்த ஒளிர் வேலா</strong> ... யமனுடைய நேரான (நீதி தவறாத) மனத்தின் தன்மையைப் போல ஒளியோடு விளங்கும் வேலை ஏந்தியவனே!</p><p align="justify"><strong>வேட்டம் தொந்தித் தந்திப் பரனுக்கு இளையோனே</strong> ... (அடியார்கள்) வேட்டதை—விரும்பியதைத்—தரும் யானைமுகத் தொந்திப்பிரானுக்கு இளையவனே!</p><p align="justify"><strong>வேப்பம் சந்திக் கந்தக் குமரப் பெருமாளே.</strong> ... வேப்பஞ்சந்தித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!</p><p align="justify"> </p><p align="justify"><strong><em>சுருக்க உரை</em></strong></p><p align="justify"><em>விண்ணிலுள்ள தேவர்களின் மெலிவுற்ற சேனையின்மேல், வஞ்சினம் உரைத்துக் கூட்டமாகப் போருக்கு வந்த அரக்கர்களுடைய கூட்டம், முன்னும்பின்னுமாகச் சிந்திச் சிதறியோடும்படிப் போரிட்டவனே! நீதி தவறாத யமனுடைய மனத்தின் தன்மையைப் போல ஒளிவீசும் வேலை ஏந்தியவனே! அடியார்களுடைய விருப்பங்களை நிறைவேற்றும் யானைமுகன்; தொந்திக் கணபதிக்கு இளையவனே! வேப்பஞ்சந்தித் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!</em></p><p align="justify"><em>பார்வையையும் மனத்தின் நாட்டத்தையும் மங்கையரின் திரண்ட மார்பகங்களில் படியவிடாமல், மனத்தை உன்மீதே முழுமையாக நாட்டுகின்ற அடியார்கள், உலகத்தையே வேண்டினாலும் தரவல்லதாகிய உன்னுடைய கமலப் பாதங்களைத் தந்தருள்வாய்.</em></p>