பகுதி - 244
இது சிறுவை என்னும் தலத்துக்கான பாடல். இத்தலத்துக்கான இன்னொரு பாடலை நம்முடைய 236ம் தவணையில் குறித்திருக்கிறோம்.
இது சிறுவை என்னும் தலத்துக்கான பாடல். இத்தலத்துக்கான இன்னொரு பாடலை நம்முடைய 236ம் தவணையில் குறித்திருக்கிறோம். சிறுவர்களான குச-லவர் அம்பு எடுத்துப் போர்புரிந்த தலமாதலால் சிறுவர் அம்பெடுத்த ஊர்—சிறுவரம்பேடு என்றும் பெயரிருக்கிறது.
இனிய நாதத்துக்கு அவசியமாகக் கருதப்படும் டகர, ணகர, ரகரங்கள் (ட, ண, ர வர்க்க எழுத்துகள்) இந்தப் பாடலில் விரவி நடைபயில்வதைக் காணலாம். எல்லா எழுத்துகளும் குறிலாய் அமைய, நெடிலெழுத்து (ஒற்று நீக்கி) 7, 15, 23, 27ம் எழுத்துகளாக வரிசையாக அமைவதைப் பார்க்கலாம். ஜலதரங்கம் ஒலிக்கும் நாதத்தை இந்தச் சந்த அமைப்பு ஏற்படுத்துகிறது.
‘தண்தமிழின் மிகு நேயா’ என்று முருகனை அழைக்கும் இந்தப் பாடல் இறைவனை நேரில் தரிசிக்கும் வரத்தை வேண்டுகிறது.
Advertisement
தந்ததன தனதான தந்ததன தனதான
தந்ததன தனதான தனதான
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு மகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாரு மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூர
மைந்துமயி லுடனாடி வரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள வுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு பெருமாளே.
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/264363103&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p><p align="justify"> </p>