பகுதி - 246
பிரமனைச் சிறைப்பிடித்த குற்றம் நீங்குவதற்காக, சிவபெருமான் சொன்னபடி முருகன் தவக்கோலம் பூண்டு, காஞ்சிபுரத்திலுள்ள குமரகோட்டத்தில்
பிரமனைச் சிறைப்பிடித்த குற்றம் நீங்குவதற்காக, சிவபெருமான் சொன்னபடி முருகன் தவக்கோலம் பூண்டு, காஞ்சிபுரத்திலுள்ள குமரகோட்டத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூசித்ததாகச் சொல்வார்கள். இன்றைய பாடல் காஞ்சியிலுள்ள அந்தக் குமரகோட்டத்துக்கானது. அழியாத முக்தியாகிய மோட்சத்தைத் தந்தருளுமாறு பாடல் வேண்டுகிறது.
‘இறைவர் மாற்றற்ற செம்பொன்…’ என்ற மூன்றாமடியில், சிவபிரானைப் பூசிக்க விருப்பம் கொண்ட உமாதேவியார், காஞ்சிபுரத்துக்கு வந்து வழிபட்ட வரலாறு சொல்லப்படுகிறது. இச்சரிதம் பெரியபுராணத்தில் திருக்குறிப்பு நாயனார் புராணத்தில் சொல்லப்படுகிறது.
தனதனாத் தத்த தந்த தனதனாத் தத்த தந்த
தனதனாத் தத்த தந்த தனதான
அறிவிலாப் பித்த ருன்ற னடிதொழாக் கெட்ட வஞ்சர்
அசடர்பேய்க் கத்தர் நன்றி யறியாத
அவலர்மேற் சொற்கள் கொண்டு கவிகளாக் கிப்புகழ்ந்து
அவரைவாழ்த் தித்தி ரிந்து பொருள்தேடிச்
சிறிதுகூட் டிக்கொ ணர்ந்து தெருவுலாத் தித்தி ரிந்து
தெரிவைமார்க் குச்சொ ரிந்து அவமேயான்
திரியுமார்க் கத்து நிந்தை யதனைமாற் றிப்ப ரிந்து
தெளியமோ க்ஷத்தை யென்று அருள்வாயே
இறைவர்மாற் றற்ற செம்பொன் வடிவம்வேற் றுப்பி ரிந்து
இடபமேற் கச்சி வந்த உமையாள்தன்
இருளைநீக் கத்த வஞ்செய் தருளநோக் கிக்கு ழைந்த
இறைவர்கேட் கத்த குஞ்சொ லுடையோனே
குறவர்கூட் டத்தில் வந்து கிழவனாய்ப் புக்கு நின்று
குருவியோட் டித்தி ரிந்த தவமானைக்
குணமதாக் கிச்சி றந்த வடிவுகாட் டிப்பு ணர்ந்த
குமரகோட் டத்த மர்ந்த பெருமாளே.
Advertisement
</p><p align="justify"><iframe height="200" src="https://w.soundcloud.com/player/?url=https%3A//api.soundcloud.com/tracks/264366437&auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true" width="50%" /></p>