பகுதி - 398
நாள்தோறும் உன்னை முத்தமிழினால்
பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இப்பாடல், ‘நாள்தோறும் உன்னை முத்தமிழினால் ஓத இட்டம் இனிதோடு ஆர நினைவாயே’ என்று வேண்டுகிறது. இறைவனை ‘சுத்த தமிழ்ஆர் ஞான முருகோனே’ என்று விளிக்கிறது.
ஒற்றொழித்து அடிக்கு 25 எழுத்துகள்; 5, 6, 12, 13, 19, 20 ஆகிய எழுத்துகள் நெடில், மற்றவை குறில்; சீரான இடைவெளிகளில் வல்லொற்று பயில்கிறது. ஒவ்வோரடியிலும் ஒன்று, மூன்று, ஐந்தாம் சீர்களில் தொடர்ச்சியாக எதுகை அமைந்திருக்கிறது.
தத்ததன தானான தத்ததன தானான
தத்ததன தானான தனதான
Advertisement
கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய
கட்டுவிடு மோர்கால மளவாவே
கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு
கற்புநெறி தான்மாய வுயர்காலன்
இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி
யிட்டவிதி யேயாவி யிழவாமுன்
எத்தியுனை நாடோறு முத்தமிழி னாலோத
இட்டமினி தோடார நினைவாயே
துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர்
தொக்கில்நெடு மாமார்பு தொளையாகத்
தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால
சுத்ததமி ழார்ஞான முருகோனே
மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ
மத்தமயில் மீதேறி வருநாளை
வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
வைத்தபடி மாறாத பெருமாளே.