முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 684

உன் திருவடிகளை விரும்பிப் போற்றும் மனம்

Updated On : 5 நவம்பர், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:32 PM

‘உன் திருவடிகளை விரும்பிப் போற்றும் மனம் அருளவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவலிதாயத்துக்கானது.  இத்தலம் சென்னை வில்லிவாக்கத்துக்கு சுமார் 3 கிலோமீட்டர் மேற்கே உள்ளது.

அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட சிறிய பாடல்.  ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு இடையின ஒற்றும்; இரண்டு நான்கு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் மூன்று குற்றெழுத்துகளும் பயில்கின்றன.


தனதய்ய தானதன                        தனதானா

Advertisement

மருமல்லி யார்குழலின்                   மடமாதர்
      மருளுள்ளி நாயடிய                 னலையாமல்

இருநல்ல வாகுமுன                      தடிபேண
      இனவல்ல மானமன                தருளாயோ

கருநெல்லி மேனியரி                      மருகோனே
      கனவள்ளி யார்கணவ               முருகேசா

திருவல்லி தாயமதி                       லுறைவோனே
      திகழ்வல்ல மாதவர்கள்             பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.