முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 696

உன்னுடைய அருளைத் தரவேண்டும்

Updated On : 18 நவம்பர், 2017 at 3:12 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:39 PM

‘ஆவி நைந்து மங்காமல் உன்னுடைய அருளைத் தரவேண்டும் என்று கோரும் இப்பாடல் திருச்செங்கோட்டுக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 19 எழுத்துகளைக் கொண்ட பாடல். மெல்லொற்றுகளால் நிறைந்த இப்பாடலில் ஒருசில இடையின ஒற்றுகளும் பயில்கின்றன.  வல்லொற்று எதுவும் இல்லை.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் குறில்-நெடில்-குறில் என மூன்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் பயில்கின்றன.


தந்தான தந்த தந்தான தந்த
      தந்தான தந்த                       தனதான

Advertisement

பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து
         பைந்தார் புனைந்த               குழல்மீதே        

பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற
         பங்கே ருகங்கொள்               முகமீதே

மந்தார மன்றல் சந்தார மொன்றி
         வன்பாத கஞ்செய்                தனமீதே        

மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து 
         மங்காம லுன்ற                  னருள்தாராய்        

கந்தா அரன்றன் மைந்தா விளங்கு  
         கன்றா முகுந்தன்                மருகோனே

கன்றா விலங்க லொன்றாறு கண்ட
         கண்டா வரம்பை                 மணவாளா         

செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
        திண்டோள் நிரம்ப                அணிவோனே        

திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு   
         செங்கோட மர்ந்த                பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.