முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 794

திருவடிகளையும் மௌன நிலையையும் பெறவேண்டும் என்று கோரும் இந்தப் பாடல் திருவண்ணாமலைக்கானது.

Updated On : 7 ஏப்ரல், 2018 at 3:01 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:10 PM

திருவடிகளையும் மௌன நிலையையும் பெறவேண்டும் என்று கோரும் இந்தப் பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 49 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இவையில்லாத மற்ற எல்லாச் சீர்களிலும் நான்கு நான்கு குற்றெழுத்துகளமாக அமைந்துள்ளன.

தனன தனதன தனதன தனதன

Advertisement

      தனன தனதன தனதன தனதன

      தனன தனதன தனதன தனதன            தனதான

அருவ மிடையென வருபவர் துவரிதழ்

         அமுது பருகியு முருகியு ம்ருகமத

         அளக மலையவு மணிதுகி லகலவு     மதிபார

      அசல முலைபுள கிதமெழ அமளியில்

         அமளி படஅந வரதமு மவசமொ

         டணையு மழகிய கலவியு மலமல      முலகோரைத்

தருவை நிகரிடு புலமையு மலமல

         முருவு மிளமையு மலமலம் விபரித

         சமய கலைகளு மலமல மலமரும்     வினைவாழ்வுஞ்

      சலிய லிபியன சனனமு மலமல

         மினியு னடியரொ டொருவழி படஇரு

         தமர பரிபுர சரணமு மவுனமு          மருள்வாயே

உருவு கரியதொர் கணைகொடு பணிபதி

         யிருகு தையுமுடி தமனிய தநுவுட

         னுருளை யிருசுடர் வலவனு மயனென மறைபூணும்

      உறுதி படுசுர ரதமிசை யடியிட

         நெறுநெ றெனமுறி தலுநிலை பெறுதவம்

         உடைய வொருவரு மிருவரு மருள்பெற            வொருகோடி

தெருவு நகரியு நிசிசரர் முடியொடு

         சடச டெனவெடி படுவன புகைவன

         திகுதி கெனஎரி வனஅனல் நகைகொடு  முனிவார்தஞ்

      சிறுவ வனசரர் சிறுமியொ டுருகிய

         பெரும அருணையி லெழுநிலை திகழ்வன

         சிகரி மிசையொரு கலபியி லுலவிய    பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.