முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 796

நற்றாய் இரங்கல் துறையில் பெருமான்..

Updated On : 11 ஏப்ரல், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:12 PM

நற்றாய் இரங்கல் துறையில் பெருமான் மீது காதல் கொண்ட மகளைக் காக்குமாறு தாய் வேண்டுகின்ற பாவனையில் அமைந்தது இப்பாடல்.

அடிக்கு ஒற்றொழிது 28 எழுத்துகளைக் கொண்ட பாடல். எல்லாச் சீர்களிலும் ஒன்றேபோல மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.

தனனத் தனனத் தனனத் தனனத்

Advertisement

      தனனத் தனனத்                 தனதான

பொரியப் பொரியப் பொலிமுத் துவடத்

         துகளிற் புதையத்                 தனமீதே

      புரளப் புரளக் கறுவித் தறுகட்

         பொருவிற் சுறவக் கொடி         வேள்தோள்       

தெரிவைக் கரிவைப் பரவைக் குருகிச்

         செயலற் றனள்கற்               பழியாதே

      செறிவுற் றணையிற் றுயிலுற் றருமைத்

         தெரிவைக் குணர்வைத்           தரவேணும்

சொரிகற் பகநற் பதியைத் தொழுகைச்

         சுரருக் குரிமைப்                  புரிவோனே 

      சுடர்பொற் கயிலைக் கடவுட் கிசையச்

         சுருதிப் பொருளைப்              பகர்வோனே

தரிகெட் டசுரப் படைகெட் டொழியத்

         தனிநெட் டயிலைத்              தொடும்வீரா 

      தவளப் பணிலத் தரளப் பழனத்

         தணிகைக் குமரப்                பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.