முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 798

என் வறுமை நீங்குமாறு....

Updated On : 13 ஏப்ரல், 2018 at 10:36 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:14 PM

‘என் வறுமை நீங்குமாறு மயில்மீதிலேறி வரவேண்டும்’ என்று கோரும் இப்பாடல், பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 27 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  முதற்சீரில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும் பயில்கின்றன.

தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன

Advertisement

      தத்தனத் தத்ததன                   தனதான

தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு 

         சத்துவிட் டப்படிபொ              லடியேனுஞ் 

      சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி 

         சத்துவத் தைப்பிரய              விடும்வேளை 

சுத்தமுத் தப்பதவி பெற்றநற் பத்தரொடு 

         தொக்குசற் றுக்கடையன்         மிடிதீரத் 

      துப்புமுத் துச்சரண பச்சைவெற் றிப்புரவி 

         சுற்றவிட் டுக்கடுகி               வரவேணும் 

வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய 

         வெற்றிசத் திக்கரக               முருகோனே 

      வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல 

         விட்டபச் சைச்சரண              மயில்வீரா    

கத்தர் நெட்டுச் சடையர் முக்கணக் கக்கடவுள் 

         கச்சியப் பர்க்கருள்செய்           குருநாதா

      கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர் 

         கற்பினுக் குற்றுபுணர்             பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.