முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 804

‘உனது நடன தரிசனத்தைத் தந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

Updated On : 20 ஏப்ரல், 2018 at 4:41 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:18 PM


‘உனது நடன தரிசனத்தைத் தந்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.  பொதுப் பாடல்கள் வரிசையைச் சேர்ந்த இப்பாடலல்லாமல் சிதம்பரம், திருத்தணிகை, திருச்செந்தூர், கொடுங்குன்றூர் ஆகிய தலங்களிலும் இறைவனுடைய திருநடனக்கோலத்தை தரிசிக்கவேண்டுமென்று குருநாதர் பாடியுள்ளார்.

அடிக்கு ஒற்றொழித்து 24 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன. 

தத்தனத் தனதனத்த      தனதான

Advertisement

நித்தமுற் றுனைநினைத்து                                              மிகநாடி

                         நிட்டைபெற் றியல்கருத்தர்                    துணையாக

நத்தியுத் தமதவத்தி                                                               னெறியாலே

                        லக்யலக் கணநிருத்த                                    மருள்வாயே

வெற்றிவிக் ரமவரக்கர்                                                       கிளைமாள

                        விட்டநத் துகரனுக்கு                                     மருகோனே

குற்றமற் றவருளத்தி                                                           லுறைவோனே

                        குக்குடக் கொடி தரித்த                                 பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.