முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 758

யாக்கையைப் பழிக்கும்

Updated On : 18 பிப்ரவரி, 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:46 PM

யாக்கையைப் பழிக்கும் இப்பாடல் இராமேசுரத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 52 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று முதல் பன்னிரண்டாவது சீர் வரையிலான எல்லாச் சீர்களிலும் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாக நான்கு நான்கு எழுத்துகள் அமைந்துள்ளன.


தானதன தானதன தானதன தானதன
                தானதன தானதன தானதன தானதன
                தானதன தானதன தானதன தானதன தனதான

Advertisement

வாலவய தாகியழ காகிமத னாகிபணி
               வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்
               வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு பொருள்தேடி

வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்
                        வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை
                        மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல சிலநாள்போய்த்

தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
                        கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி
                        சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி யுறுநாளிற்

சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
                        சோகைகள் மாலைசுர மோடுபிணி தூறிருமல்
                        சூழலுற மூலகசு மாலமெனெ நாறியுட லழிவேனோ

நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை
                        யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென
                        நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு மிளையோனே

நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத
                        லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி
                        ஞானகுற மாதைதினை காவில்மண மேவுபுகழ்ம யில்வீரா

ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்
                        வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழ
                        மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் பொடியாக

ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
                       பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவே
                        யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.