பகுதி - 758
யாக்கையைப் பழிக்கும்
யாக்கையைப் பழிக்கும் இப்பாடல் இராமேசுரத்துக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 52 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று முதல் பன்னிரண்டாவது சீர் வரையிலான எல்லாச் சீர்களிலும் ஒரு நெடிலும் மூன்று குறிலுமாக நான்கு நான்கு எழுத்துகள் அமைந்துள்ளன.
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தானதன தானதன
தானதன தானதன தானதன தானதன தனதான
Advertisement
வாலவய தாகியழ காகிமத னாகிபணி
வாணிபமொ டாடிமரு ளாடிவிளை யாடிவிழல்
வாழ்வுசத மாகிவலு வாகிமட கூடமொடு பொருள்தேடி
வாசபுழு கேடுமல ரோடுமன மாகிமகிழ்
வாசனைக ளாதியிட லாகிமய லாகிவிலை
மாதர்களை மேவியவ ராசைதனி லேசுழல சிலநாள்போய்த்
தோல்திரைக ளாகிநரை யாகிகுரு டாகியிரு
கால்கள்தடு மாறிசெவி மாறிபசு பாசபதி
சூழ்கதிகள் மாறிசுக மாறிதடி யோடுதிரி யுறுநாளிற்
சூலைசொறி யீளைவலி வாதமொடு நீரிழிவு
சோகைகள் மாலைசுர மோடுபிணி தூறிருமல்
சூழலுற மூலகசு மாலமெனெ நாறியுட லழிவேனோ
நாலுமுக னாதியரி யோமெனஅ தாரமுரை
யாதபிர மாவைவிழ மோதிபொரு ளோதுகென
நாலுசிர மோடுசிகை தூளிபட தாளமிடு மிளையோனே
நாறிதழி வேணிசிவ ரூபகலி யாணிமுத
லீணமக வானைமகிழ் தோழவன மீதுசெறி
ஞானகுற மாதைதினை காவில்மண மேவுபுகழ்ம யில்வீரா
ஓலமிடு தாடகைசு வாகுவள ரேழுமரம்
வாலியொடு நீலிபக னோடொருவி ராதனெழ
மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் பொடியாக
ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
பாணிதிரு மார்பனரி கேசன்மரு காஎனவே
யோதமறை ராமெசுர மேவுகும ராவமரர் பெருமாளே.