முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

திருப்புகழ் - 760

மன மயக்கங்கள் அறவேண்டும்

Updated On : 20 பிப்ரவரி, 2018 at 3:11 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:48 PM

மன மயக்கங்கள் அறவேண்டும் என்று கோரும் இப்பாடல் இராமேசுரத்துக்குரியது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு நெட்டெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் உள்ளன.


தானா தனத்ததன தானா தனத்ததன
                தானா தனத்ததன தனதான

Advertisement

வானோர் வழுத்துனது பாதார பத்மமலர்
                        மீதே பணிக்கும்வகை யறியாதே

மானார் வலைக்கணதி லேதூளி மெத்தையினி
                        லூடே யணைத்துதவு மதனாலே

தேனோ கருப்பிலெழு பாகோ விதற்கிணைக
                        ளேதோ வெனக்கலவி பலகோடி

தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு
                        சேறாடல் பெற்றதுய ரொழியேனோ

மேனாடு பெற்றுவளர் சூராதி பற்கெதிரி
                        னூடேகி நிற்குமிரு கழலோனே

மேகார வுக்ரபரி தானேறி வெற்றிபுனை
                        வீரா குறச்சிறுமி மணவாளா

ஞானா பரற்கினிய வேதாக மப்பொருளை
                        நாணா துரைக்குமொரு பெரியோனே

நாரா யணற்குமரு காவீறு பெற்றிலகு
                        ராமே சுரத்திலுறை பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.