திருப்புகழ் - 760
மன மயக்கங்கள் அறவேண்டும்
மன மயக்கங்கள் அறவேண்டும் என்று கோரும் இப்பாடல் இராமேசுரத்துக்குரியது.
அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு நெட்டெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் உள்ளன.
தானா தனத்ததன தானா தனத்ததன
தானா தனத்ததன தனதான
Advertisement
வானோர் வழுத்துனது பாதார பத்மமலர்
மீதே பணிக்கும்வகை யறியாதே
மானார் வலைக்கணதி லேதூளி மெத்தையினி
லூடே யணைத்துதவு மதனாலே
தேனோ கருப்பிலெழு பாகோ விதற்கிணைக
ளேதோ வெனக்கலவி பலகோடி
தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு
சேறாடல் பெற்றதுய ரொழியேனோ
மேனாடு பெற்றுவளர் சூராதி பற்கெதிரி
னூடேகி நிற்குமிரு கழலோனே
மேகார வுக்ரபரி தானேறி வெற்றிபுனை
வீரா குறச்சிறுமி மணவாளா
ஞானா பரற்கினிய வேதாக மப்பொருளை
நாணா துரைக்குமொரு பெரியோனே
நாரா யணற்குமரு காவீறு பெற்றிலகு
ராமே சுரத்திலுறை பெருமாளே.