முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 768

அடியேனுடைய வினைகளை அழித்தருள

Updated On : 1 மார்ச், 2018 at 12:37 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:51 PM

‘உன்னுடைய திருவடிகளைத் தந்து அடியேனுடைய வினைகளை அழித்தருள வேண்டும்’ என்று வேண்டுகிற இப்பாடல் காஞ்சீபுரத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.


தனன தத்தன தனன தத்தன 
                தனன தத்தன தனதான 

Advertisement

படிறொ ழுக்கமு மடம னத்துள
                        படிப ரித்துட னொடிபேசும் 

பகடி கட்குள மகிழ மெய்ப்பொருள் 
                        பலகொ டுத்தற உயிர்வாடா 

மிடியெ னப்பெரு வடவை சுட்டிட
                        விதன முற்றிட மிகவாழும் 

விரகு கெட்டரு நரகு விட்டிரு 
                        வினைய றப்பத மருள்வாயே 

கொடியி டைக்குற வடிவி யைப்புணர் 
                        குமர கச்சியி லமர்மார்பா 

குரவு செச்சைவெண் முளரி புத்தலர்
                        குவளை முற்றணி திருமார்பா 

பொடின டப்பட நெடிய விற்கொடு 
                        புரமெ ரித்தவர் குருநாதா 

பொருதி ரைக்கடல் நிருத ரைப்படை
                        பொருது ழக்கிய பெருமாளே. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.