முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 876

அடியேன் கலைஞான..

Updated On : 24 ஜூலை, 2018 at 11:09 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:49 PM

‘அடியேன் கலைஞானங்களைப் பெற வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித் 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குறில், ஒரு நெடில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குறில், இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும் உள்ளன.  ஆறாவது சீரில் மட்டும் ‘தனத்தத்’ என்றும் ‘தத்தத்’ என்றும் குழிப்பு மாறுபடுவதால் சில இடங்களில் இரண்டு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளுமாக அமைந்துள்ளன. இதைப்போலவே இரண்டாம் அடியின் முதற் சீரும் லேசான மாற்றத்தைக் கொண்டிருக்கிறது.

தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத்

Advertisement

      தனத்தா தனத்தத்                   தனதான

அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக்

         கடுத்தாசை பற்றித்               தளராதே

      அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட்

         டறப்பே தகப்பட்                  டழியாதே

கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக்

         கலிச்சா கரத்திற்                 பிறவாதே

      கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக்

         கலைப்போ தகத்தைப்            புகல்வாயே

ஒருக்கால் நினைந்திட் டிருக்கால் மிகுந்திட்

         டுரைப்பார்கள் சித்தத்             துறைவோனே

      உரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட்

         டொளித்தோடும் வெற்றிக்        குமரேசா

செருக்கா தருக்கிச் சுரச்சூர் நெருக்கச்

         செருச்சூர் மரிக்கப்                பொரும்வேலா

      திறப்பூ  தலத்திற் றிரட்சோ ணவெற்பிற்

         றிருக்கோ புரத்திற்               பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.