பகுதி - 878
திருவருளைப் பெற வேண்டும் என்று..
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:49 PM
‘திருவருளைப் பெறவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.
நான்கே சீர்களைக் கொண்டு, தொங்கல் சீர் இல்லாமல் அமைந்திருக்கும் இப்பாட்டில் அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகள் உள்ளன. ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு நெடிலுமாக நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனதனனத் தனதான
Advertisement
தனதனனத் தனதான
இரவுபகற் பலகாலும்
இயலிசைமுத் தமிழ்கூறித்
திரமதனைத் தெளிவாகத்
திருவருளைத் தருவாயே
பரகருணைப் பெருவாழ்வே
பரசிவத் துவஞானா
அரனருள்சற் புதல்வோனே
அருணகிரிப் பெருமாளே.