முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 878

திருவருளைப் பெற வேண்டும் என்று..

Updated On : 26 ஜூலை, 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:49 PM

‘திருவருளைப் பெறவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

நான்கே சீர்களைக் கொண்டு, தொங்கல் சீர் இல்லாமல் அமைந்திருக்கும் இப்பாட்டில் அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகள் உள்ளன. ஒன்று, மூன்று ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, நான்கு ஆகிய சீர்களில் மூன்று குறிலும் ஒரு நெடிலுமாக நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதனனத் தனதான

Advertisement

      தனதனனத் தனதான

இரவுபகற் பலகாலும்

      இயலிசைமுத் தமிழ்கூறித்          

திரமதனைத் தெளிவாகத்

      திருவருளைத் தருவாயே

பரகருணைப் பெருவாழ்வே

      பரசிவத் துவஞானா

அரனருள்சற் புதல்வோனே

      அருணகிரிப் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.