முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 880

உன்னுடைய கிருபையைப் பெறவேண்டும்..

Updated On : 31 ஜூலை, 2018 at 3:34 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:53 PM

‘உன்னுடைய கிருபையைப் பெறவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவண்ணாமலைக்குரியது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்து, ஒரு நெடில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனன தனனா தனன தனனா

Advertisement

      தனன தனனா                      தனதான

இருவர் மயலோ அமளி விதமோ

         எனென செயலோ                அணுகாத

      இருடி அயன்மா லமர ரடியா

         ரிசையு மொலிதா                னிவைகேளா

தொருவ னடியே னலறு மொழிதா

         னொருவர் பரிவாய்               மொழிவாரோ

      உனது பததூள் புவன கிரிதா

         னுனது கிருபா                   கரமேதோ

பரம குருவா யணுவி லசைவாய்

         பவன முதலா                   கியபூதப்

      படையு முடையாய் சகல வடிவாய்

         பழைய வடிவா                   கியவேலா

அரியு மயனோ டபய மெனவே

         அயிலை யிருள்மேல்            விடுவோனே

      அடிமை கொடுநோய் பொடிகள் படவே

         அருண கிரிவாழ்                 பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.