பகுதி - 880
உன்னுடைய கிருபையைப் பெறவேண்டும்..
‘உன்னுடைய கிருபையைப் பெறவேண்டும்’ என்று கோருகின்ற இப்பாடல் திருவண்ணாமலைக்குரியது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்து, ஒரு நெடில் என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.
தனன தனனா தனன தனனா
Advertisement
தனன தனனா தனதான
இருவர் மயலோ அமளி விதமோ
எனென செயலோ அணுகாத
இருடி அயன்மா லமர ரடியா
ரிசையு மொலிதா னிவைகேளா
தொருவ னடியே னலறு மொழிதா
னொருவர் பரிவாய் மொழிவாரோ
உனது பததூள் புவன கிரிதா
னுனது கிருபா கரமேதோ
பரம குருவா யணுவி லசைவாய்
பவன முதலா கியபூதப்
படையு முடையாய் சகல வடிவாய்
பழைய வடிவா கியவேலா
அரியு மயனோ டபய மெனவே
அயிலை யிருள்மேல் விடுவோனே
அடிமை கொடுநோய் பொடிகள் படவே
அருண கிரிவாழ் பெருமாளே.