முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 858

கருவிலே விழுந்து மீண்டும்..

Updated On : 20 ஜூன், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:29 PM

‘கருவிலே விழுந்து மீண்டும் மீண்டும் பிறக்கின்ற இந்த நிலை ஒழியவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருச்செந்தூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் இரண்டு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் உள்ளன.

தனதனன தந்த தனதனன தந்த

Advertisement

                தனதனன தந்த                                                           தனதான

மனைகனக மைந்தர் தமதழகு பெண்டிர்

                        வலிமைகுல நின்ற                                        நிலையூர்பேர்

      வளரிளமை தஞ்ச முனைபுனைவ ளங்கள்

                        வரிசைதம ரென்று                                          வருமாயக்

கனவுநிலை யின்ப மதனையென தென்று

                        கருதிவிழி யின்ப                                              மடவார்தம்

      கலவிமயல் கொண்டு பலவுடல்பு ணர்ந்து

                        கருவில் விழுகின்ற                                       தியல்போதான்

நினையுநின தன்பர் பழவினைக ளைந்து

                        நெடுவரைபி ளந்த                                            கதிர்வேலா

      நிலமுதல் விளங்கு நலமருவு செந்தில்

                        நிலைபெறஇ ருந்த                                          முருகோனே

புனைமலர்பு னைந்த புனமறம டந்தை

                        புளகஇரு கொங்கை                                        புணர்மார்பா

      பொருதுடனெ திர்ந்த நிருதர்மகு டங்கள்

                        பொடிபடந டந்த                                                  பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.