சாணத்தில் இருந்து சமையல் எரிவாயு...
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே நடக்கும் போரால் 'சமையல் வாயு' என்று அழைக்கப்படும் எல்.பி.ஜி. வாயு பற்றாக்குறை பெரும்பாலான நாடுகளின் செலவுகளை அதிகரிக்கச் செய்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே நடக்கும் போரால் 'சமையல் வாயு' என்று அழைக்கப்படும் எல்.பி.ஜி. வாயு பற்றாக்குறை பெரும்பாலான நாடுகளின் செலவுகளை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் பண வீக்கம் அதிகரிப்பதுடன் தொழில் மந்த நிலையும் ஏற்பட்டுள்ளது. தாமதமான சமையல் வாயு விநியோகம் மக்களிடையே பதற்றநிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
நம் நாட்டில் கிராமப்புற மக்கள் உணவைச் சமைக்கும் முறையை மாற்றி, விறகு அல்லது விவசாயக் கழிவுகளைப் பயன்படுத்தும் பாரம்பரிய அடுப்புகளுக்குத் திரும்பியுள்ளனர். நகரவாசிகள் மின்சார இணைப்புகள், இண்டக்ஷன் அடுப்புகள், சூரியச் சக்தியில் இயங்கும் சமையல் அடுப்புகள் போன்ற நவீன மாற்று வழிகளுக்கு மாறி வருகின்றனர்.
உத்தரகண்டில் 'சமய சஞ்சீவி' எனப்படும் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எரிவாயுவானது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
Advertisement
ராகேஷ் என்பவர் தனது தம்பியுடன் அதிக அளவில் பசு, எருமை, காளை சாணத்தைச் சேகரித்து சமையல் எரிவாயுவைத் தயாரித்து, அதை சிலிண்டரில் அடைத்து மக்களுக்கு விநியோகிக்கவும் தொடங்கியுள்ளார்.
12 கிலோ எடையுள்ள சிலிண்டரில் 18 கிலோ சாணியிலிருந்து தயாரிக்கப்பட்ட எரிவாயுவை அடைத்து, சிலிண்டர் ஒன்றை ரூ.500-க்கு விற்கின்றனர். புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தினர் இந்த முயற்சிக்கு ஊக்கம் அளித்துள்ளனர்.
நீண்ட காலமாக கிராமப்புறங்களில் சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய மீத்தேன் நிறைந்த எரிவாயுவை உற்பத்தி செய்வதற்காக, மாட்டுச் சாணம் போன்ற கரிமக் கழிவுகளை மட்கச் செய்வது நடந்து வருகிறது. ஆனால், இதரப் பயனாளர்களுக்கு
விநியோகம் செய்வது என்ற அளவுக்கு விரிவாகவில்லை. இந்த முயற்சியானது சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் உயிர்வாயுவை எல்.பி.ஜி. போன்று மாற்ற வசதியானதாக ஆக்கியுள்ளது.
இதேபோல், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் எப்போதும் 50 யானைகள் இருக்கும். யானைகள் போடும் சாணம் தினமும் சிறிய குன்று போல குவியும். இந்தச் சாணத்திலிருந்து சமையல் எரிவாயுவைத் தயாரித்து கோயிலின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்துகொள்கின்றனர்.