முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 778

அடிக்கு ஒற்றொழித்து

Updated On : 12 மார்ச், 2018 at 7:03 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:57 PM

‘உன் வலிமையை என்றும் மறவேன்’ என்று நன்றி பாராட்டுகிற இப்பாடல் விராலி மலைக்குரியது.

அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்களில் இரண்டு நெடிலும் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என நான்கெழுத்துகளும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலுமாய் இரண்டெழுத்துகளும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் அமைந்திருக்கின்றன.

தானாத்தன தான தனதன
      தானாத்தன தான தனதன
      தானாத்தன தான தனதன                 தனதான

Advertisement

காமாத்திர மாகி யிளைஞர்கள்
       வாழ்நாட்கொடு போகி யழகிய
        காதாட்டிய பார இருகுழை              யளவோடிக்
        கார்போற்றவ ழோதி நிழல்தனி
         லார்வாட்கடை யீடு கனகொடு
         காலேற்றுவை வேலின் முனைகடை    யமதூதர்

ஏமாப்பற மோக வியல்செய்து
         நீலோற்பல ஆசில் மலருட
         னேராட்டவி நோத மிடும்விழி          மடவார்பால்
         ஏகாப்பழி பூணு மருளற
         நீதோற்றிமு னாளு மடிமையை
         யீடேற்றுத லாலுன் வலிமையை        மறவேனே

சீமாட்டியு மாய திரிபுரை
        காலாக்கிரி கோப பயிரவி
        சீலோத்தமி நீலி சுரதிரி                 புவநேசை
        சீகார்த்திகை யாய அறுவகை
        மாதாக்கள்கு மார னெனவெகு
        சீராட்டொடு பேண வடதிசை            கயிலாசக்

கோமாற்குப தேச முபநிட
        வேதார்த்தமெய்ஞ் ஞான நெறியருள்
         கோதாட்டிய ஸ்வாமி யெனவரு        மிளையோனே
         கோடாச்சிவ பூஜை பவுருஷ
         மாறாக்கொடை நாளு மருவிய
         கோனாட்டுவி ராலி மலையுறை        பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.