முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 782

நான் மோகவசப்படுதல் ஒழியவேண்டும்

Updated On : 15 மார்ச், 2018 at 1:36 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 5:59 PM


‘நான் மோகவசப்படுதல் ஒழியவேண்டும்’ என்று வேண்டுகிற இப்பாடல் திருசிராப்பள்ளிக்கு உரியது.  பாடலின் மூன்றாம், நான்காம் அடிகள் இரண்டிலும் குருநாதர் அம்பிகையின் பல பெயர்களை அடுக்குகிறார்.  முருகனடிமையாகிய அவர் நாராயணனிடத்திலும், நாராயணனிடத்திலும் பரவசப்படுவதிலும் பரமசிவன் என்றால் மனமுருகுவதிலும் வியப்பில்லை.

அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாய் மூன்றெழுத்துகளும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் அமைந்துள்ளன.

தனன தானன தத்தன தந்தன

Advertisement

      தனன தானன தத்தன தந்தன

      தனன தானன தத்தன தந்தன             தனதான
 

குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல்

         கடுவ தாமெனு மைக்கண் மடந்தையர்

         குமுத வாயமு தத்தை நுகர்ந்திசை     பொருகாடை

         குயில்பு றாமயில் குக்கில் சுரும்பனம்

         வனப தாயுத மொக்கு மெனும்படி

         குரல்வி டாஇரு பொற்குட மும்புள     கிதமாகப்

பவள ரேகைப டைத்தத ரங்குறி

         யுறவி யாளப டத்தை யணைந்துகை

         பரிச தாடன மெய்க்கர ணங்களின்      மதனூலின்

         படியி லேசெய்து ருக்கிமு யங்கியெ

         அவச மாய்வட பத்ர நெடுஞ்சுழி

         படியு மோகச முத்ரமழுந்துத            லொழிவேனோ

தவள ரூபச ரச்சுதி யிந்திரை

         ரதிபுலோமசை க்ருத்திகை ரம்பையர்

         சமுக சேவித துர்க்கை பயங்கரி         புவநேசை

         சகல காரணி சத்தி பரம்பரி

         யிமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி

         சமக நாயகி நிஷ்களி குண்டலி         யெமதாயி

சிவைம நோமணி சிற்சுக சுந்தரி

         கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை

         த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள்   முருகோனே

         சிகர கோபுர சித்திர மண்டப

         மகர தோரண ரத்ந அலங்க்ருத

         திரிசிராமலை அப்பர் வணங்கிய        பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.