பகுதி - 782
நான் மோகவசப்படுதல் ஒழியவேண்டும்
‘நான் மோகவசப்படுதல் ஒழியவேண்டும்’ என்று வேண்டுகிற இப்பாடல் திருசிராப்பள்ளிக்கு உரியது. பாடலின் மூன்றாம், நான்காம் அடிகள் இரண்டிலும் குருநாதர் அம்பிகையின் பல பெயர்களை அடுக்குகிறார். முருகனடிமையாகிய அவர் நாராயணனிடத்திலும், நாராயணனிடத்திலும் பரவசப்படுவதிலும் பரமசிவன் என்றால் மனமுருகுவதிலும் வியப்பில்லை.
அடிக்கு ஒற்றொழித்து 40 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாய் மூன்றெழுத்துகளும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றும் அமைந்துள்ளன.
தனன தானன தத்தன தந்தன
Advertisement
தனன தானன தத்தன தந்தன
தனன தானன தத்தன தந்தன தனதான
குவளை பூசல்வி ளைத்திடு மங்கயல்
கடுவ தாமெனு மைக்கண் மடந்தையர்
குமுத வாயமு தத்தை நுகர்ந்திசை பொருகாடை
குயில்பு றாமயில் குக்கில் சுரும்பனம்
வனப தாயுத மொக்கு மெனும்படி
குரல்வி டாஇரு பொற்குட மும்புள கிதமாகப்
பவள ரேகைப டைத்தத ரங்குறி
யுறவி யாளப டத்தை யணைந்துகை
பரிச தாடன மெய்க்கர ணங்களின் மதனூலின்
படியி லேசெய்து ருக்கிமு யங்கியெ
அவச மாய்வட பத்ர நெடுஞ்சுழி
படியு மோகச முத்ரமழுந்துத லொழிவேனோ
தவள ரூபச ரச்சுதி யிந்திரை
ரதிபுலோமசை க்ருத்திகை ரம்பையர்
சமுக சேவித துர்க்கை பயங்கரி புவநேசை
சகல காரணி சத்தி பரம்பரி
யிமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி
சமக நாயகி நிஷ்களி குண்டலி யெமதாயி
சிவைம நோமணி சிற்சுக சுந்தரி
கவுரி வேதவி தக்ஷணி யம்பிகை
த்ரிபுரை யாமளை யற்பொடு தந்தருள் முருகோனே
சிகர கோபுர சித்திர மண்டப
மகர தோரண ரத்ந அலங்க்ருத
திரிசிராமலை அப்பர் வணங்கிய பெருமாளே.