பகுதி - 786
‘அடியேனைக் கொடிய நரகத்தில் விழாமல் காக்கவேண்டும்’
‘அடியேனைக் கொடிய நரகத்தில் விழாமல் காக்கவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.
அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல். ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு நெடிலுமாக மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.
தனனா தனனத் தனனா தனனத்
Advertisement
தனனா தனனத் தனதான
அருமா மதனைப் பிரியா தசரக்
கயலார் நயனக் கொடியார்தம்
அழகார் புளகப் புழுகார் சயிலத்
தணையா வலிகெட் டுடல்தாழ
இருமா நடைபுக் குரைபோ யுணர்வற்
றிளையா வுளமுக் குயிர்சோர
எரிவாய் நரகிற் புகுதா தபடிக்
கிருபா தமெனக் கருள்வாயே
ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட்
டுரமோ டெறிபொற் கதிர்வேலா
உறைமா னடவிக் குறமா மகளுக்
குருகா றிருபொற் புயவீரா
திருமால் கமலப் பிரமா விழியிற்
றெரியா வரனுக் கரியோனே
செழுநீர் வயல்சுற் றருணா புரியிற்
றிருவீ தியினிற் பெருமாளே.