முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 786 

‘அடியேனைக் கொடிய நரகத்தில் விழாமல் காக்கவேண்டும்’ 

Updated On : 19 மார்ச், 2018 at 12:59 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:01 PM

‘அடியேனைக் கொடிய நரகத்தில் விழாமல் காக்கவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு நெடிலுமாக மூன்றெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் அமைந்துள்ளன.


தனனா தனனத் தனனா தனனத்

Advertisement

      தனனா தனனத்                     தனதான


அருமா மதனைப் பிரியா தசரக்

         கயலார் நயனக்                  கொடியார்தம்

        அழகார் புளகப் புழுகார் சயிலத்

         தணையா வலிகெட்              டுடல்தாழ

இருமா நடைபுக் குரைபோ யுணர்வற்

         றிளையா வுளமுக்               குயிர்சோர

        எரிவாய் நரகிற் புகுதா தபடிக்

         கிருபா தமெனக்                  கருள்வாயே

ஒருமால் வரையைச் சிறுதூள் படவிட்

         டுரமோ டெறிபொற்              கதிர்வேலா

         உறைமா னடவிக் குறமா மகளுக்

         குருகா றிருபொற்                புயவீரா

திருமால் கமலப் பிரமா விழியிற்

         றெரியா வரனுக்                 கரியோனே

         செழுநீர் வயல்சுற் றருணா புரியிற்

         றிருவீ தியினிற்                  பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.