முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 788

அடியேனின் பிறவிநோய் அழியவேண்டும்

Updated On : 23 மார்ச், 2018 at 10:57 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:02 PM


‘அடியேனின் பிறவிநோய் அழியவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

 அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு நெட்டெழுத்தும் என நான்கெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.


தனதனா தானனத் தனதனா தானனத்

Advertisement

      தனதனா தானனத்                  தனதான


அழுதுமா வாவெனத் தொழுதுமூ டூடுநெக்

         கவசமா யாதரக்                  கடலூடுற்

      றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்

         கறியொணா மோனமுத்          திரைநாடிப்

பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப்

         பெரியஆ தேசபுற்                 புதமாய

      பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்

         பெறுவதோ நானினிப்             புகல்வாயே

பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப்

         படியுமா றாயினத்                தனசாரம்

      பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்

         பரமமா யூரவித்                  தகவேளே

பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்

         பொடிபடா வோடமுத்            தெறிமீனப்

      புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்

         பொருதவே லாயுதப்              பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.