தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 926

ஆசை அறவேண்டும்..

ஹரி கிருஷ்ணன்

‘ஆசை அறவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பழநிக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 36 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, இரண்டு, ஆறு, ஏழு ஆகிய சீர்களில் ஐந்து குற்றெழுத்துகளும்; மூன்று, நான்கு, எட்டு, ஒன்பது ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் ஒரு குறிலும், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றுமாக இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதனன தனதனன தானத் தானத்            தனதானா

ஒருபொழுது மிருசரண நேசத் தேவைத்        துணரேனே

      உனதுபழ நிமலையெனு மூரைச் சேவித் தறியேனே

பெருபுவியி லுயர்வரிய வாழ்வைத் தீரக்       குறியேனே

      பிறவியற நினைகுவனெ னாசைப் பாடைத் தவிரேனோ

துரிதமிடு நிருதர்புர சூறைக் காரப்              பெருமாளே

      தொழுதுவழி படுமடியர் காவற் காரப்    பெருமாளே

விருதுகவி விதரணவி நோதக் காரப்           பெருமாளே

      விறன்மறவர் சிறுமிதிரு வேளைக் காரப் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT