தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 938

யமன் வரும்போது அடியேனைக்..

ஹரி கிருஷ்ணன்

‘யமன் வரும்போது அடியேனைக் காத்தருள வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும் என மூன்று எழுத்துகளும் அமைந்துள்ளன.

தனதனத் தானனத் தனதனத் தானனத்

      தனதனத் தானனத்                  தனதான

கயல்விழித் தேனெனைச் செயலழித் தாயெனக்

         கணவகெட் டேனெனப்           பெறுமாது

      கருதுபுத் ராஎனப் புதல்வரப் பாஎனக்

         கதறிடப் பாடையிற்              றலைமீதே

பயில்குலத் தாரழப் பழையநட் பாரழப்

         பறைகள்கொட் டாவரச்           சமனாரும்

      பரியகைப் பாசம்விட் டெறியுமப் போதெனைப்

         பரிகரித் தாவியைத்              தரவேணும்

அயிலறச் சேவல்கைக் கினிதரத் தோகையுற்

         றருணையிற் கோபுரத்            துறைவோனே

      அமரரத் தாசிறுக் குமரிமுத் தாசிவத்

         தரியசொற் பாவலர்க்             கெளியோனே

புயலிளைப் பாறுபொற் சயிலமொய்ச் சாரலிற்

         புனமறப் பாவையைப்            புணர்வோனே

      பொடிபடப் பூதரத் தொடுகடற் சூரனைப்

         பொருமுழுச் சேவகப்             பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

இந்தியாவில் நஷ்டம் அதிகரித்தாலும் முதலீட்டை அதிரிக்கும் ஸ்டாா்பக்ஸ்!

இந்திய தயாரிப்பு ரண ஜன்னி, தொண்டை அடைப்பான் தடுப்பூசி மருந்து: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டா அறிமுகம்

வேலூா் ஏடிஎஸ்பி பழனி பொறுப்பேற்பு!

SCROLL FOR NEXT