இந்த நாளில் அன்று - (25.08.1966) - கல்பாக்கம் அணு விசை நிலையம் - இந்திய விஞ்ஞானிகளே வடிவமைத்துக் கட்டுவர்
கல்பாக்கம் அணு விசை நிலையத்தை இந்திய விஞ்ஞானிகளே வடிவமைத்துக் கட்டுவார்கள் என்று அணுசக்தி கமிஷன் தலைவர் டாக்டர் விக்ரம் சாராபாய் கூறினார்.
கல்பாக்கம் அணு விசை நிலையத்தை இந்திய விஞ்ஞானிகளே வடிவமைத்துக் கட்டுவார்கள் என்று அணுசக்தி கமிஷன் தலைவர் டாக்டர் விக்ரம் சாராபாய் கூறினார்.
பார்லிமென்ட் அணுசக்தி பூர்வாங்க ஆலோசனைக் கூட்டத்தில் அவர் கூறியதாவது -
சென்னை அருகே கல்பாக்கத்தில் அணு சக்தி மின்சார நிலையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இந்த அணு உலையை இந்திய விஞ்ஞானிகளே வடிவமைத்துக் கட்டுவார்கள். இந்த அணு உலைக்காக பிரெஞ்சு தொழில்நுட்ப ஒத்துழைப்பை இந்தியா ஒருபோதும் கேட்கவில்லை.
Advertisement
இந்தியாவில் தயாரிக்கப்படாத சில இயந்திரங்கள், உறுப்புகள் மூலப் பொருள்களின் இறக்குமதிக்கான அந்நியச் செலாவணிச் செலவை ஈடு செய்வதற்காகப் பிரெஞ்சு சர்க்காரிடமிருந்து விசேஷ கடனுதவியைப் பெறுவதைப் பற்றியே பேச்சுக்கள் நடைபெறுகின்றன.