முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(08.03.1960)பத்மினிக்கு விமான நிலைய வாசம் - கெய்ரோவில் குவாரண்டைன் கட்டுப்பாடு

காலரா தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதற்குச் செல்லத்தக்க அத்தாட்சி வைத்திராததால், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரம் பத்மினிக்கு இன்று கெய்ரோவில் குவாரண்டைன் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:05 PM
பகிர்:

இந்த நாளில் அன்று

(08.03.1960)

பத்மினிக்கு விமான நிலைய வாசம் - கெய்ரோவில் குவாரண்டைன் கட்டுப்பாடு

Advertisement

காலரா தடுப்பு ஊசி போட்டுக்கொண்டதற்குச் செல்லத்தக்க அத்தாட்சி வைத்திராததால், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரம் பத்மினிக்கு இன்று கெய்ரோவில் குவாரண்டைன் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

எகிப்திய கலாசார இலாகாவின் அழைப்பின் பேரில் ஆப்பிரிக்கா - ஆசிய திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக பத்மினி, கெய்ரோ போயிருப்பது நினைவிருக்கலாம். அவருடன் சகோதரி ராகினியும் அவரது தாயாரும் போயிருக்கிறார்கள்.

அவருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு மார்ச் 11-ம் தேதியன்று நீக்கப்படும். திரைப்பட இறுதி விழாவில் மார்ச் 12-ம் தேதி அவருடைய நாட்டிய நிகழ்ச்சி இருக்கிறது.

விமான நிலைய விருந்தாளி அறையில் பத்மினியுடன் அவர் தாயாரும், தங்கையும் துணை இருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments