முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(23.05.1981)ஆட்சி கவிழ்ப்பு பயம் இல்லை, கவலையும் இல்லை - எம்.ஜி.ஆர்.

தமது அரசாங்கத்தை மத்திய அரசு கவிழ்க்குமோ என்று தமக்கு பயமில்லை என்றும், தமக்கு அதுபற்றிய கவலையும் இல்லை என்றும் முதல் அமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் கூறினார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

தமது அரசாங்கத்தை மத்திய அரசு கவிழ்க்குமோ என்று தமக்கு பயமில்லை என்றும், தமக்கு அதுபற்றிய கவலையும் இல்லை என்றும் முதல் அமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் கூறினார்.

மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே எவ்வித தகராறும் இல்லை என்றும், உறவுகள் தொடர்ந்து சுமுகமாகவே உள்ளதாகவும் அவர் கூறினார்.

காங்கிரஸ் (இ) கட்சி ஆழமாகப் புதைக்கப்பட்டுவிட்டதாக தாம் சில தினங்களுக்கு முன் உதகையில் பேசவில்லை என்றும் எம்ஜிஆர் கூறினார். தாம் ஒருபோதும் அவ்வாறு கூறவில்லை என்றும் ஒரு அரசியல் கட்சியை எப்படி ஆழமாகப் புதைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

1967-ம் ஆண்டுக்குப் பின் திராவிட மரபில் வரும் கட்சிகளையே மக்கள் ஆட்சியில் அமர்த்துவதாகவே தாம் உதகையில் கூறியதாக அவர் குறிப்பிட்டார்.

உள்பூசல் காரணமாகவே காங்கிரஸ் (இ) கட்சி தமிழகத்தில் வளரவில்லை. உள்பூசலை கைவிட்டால் அவர்களுக்கே நன்மை உண்டு என்றார் அவர்.

தமிழக மந்திரி சபையில் உடனடியாக மாற்றம் எதுவும் இருக்காது. தமிழகம் முழுவதற்கும் பிரதிநிதியாக தாம் உள்ளதாகவும் அவர் சொன்னார். அதனால், மந்திரி சபையை மாற்றி அமைக்க வேண்டிய அவசரம் எதுவும் தமக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

போலீஸ் டைரக்டர் ஜெனரல் பதவிக்குப் புதிதாக யாரையும் நியமிப்பது பற்றி அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. அதற்கு எந்த அவசரமும் இல்லை என்று எம்.ஜி,ஆர். சொன்னார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments