இந்த நாளில் அன்று (27.05.1985) குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு தமிழக அமைச்சர் எதிர்ப்பு
தமிழகத்தில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்துக்கு எதிராக அமைச்சர் ஒருவரே பேசியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதால்,
தமிழகத்தில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்துக்கு எதிராக அமைச்சர் ஒருவரே பேசியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதால், தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, தமிழர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளத் தேவையில்லை என்று மின்துறை அமைச்சர் எஸ். ராமச்சந்திரன் கூறினார்.
சேலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் வி. பழனிசாமி, குடும்ப நலத் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியபோது அமைச்சர் மேற்கண்ட கருத்தை வலியுறுத்தினார்.
தமிழகத்தில் குடும்ப நலத் திட்டங்கள் குறித்து வலியுறுத்த வேண்டாம் என்று அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.