இந்த நாளில் அன்று - (02.09.1976) - மோட்டார் சைக்கிளில் செல்வோர் கட்டாயமாக இரும்புத் தொப்பி அணிய வேண்டும் - புது மசோதா தாக்கல்
மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்களும், பின்னால் உட்கார்ந்து செல்பவர்களும் இரும்புத் தொப்பிகளை அணிவதைக் கட்டாயமாக்க வகை செய்யும் மசோதாவை ராஜ்ய சபையில் போக்குவரத்து அமைச்சர் ஜி.எல்.தில்லான் பிரேரித்தார்.
மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்களும், பின்னால் உட்கார்ந்து செல்பவர்களும் இரும்புத் தொப்பிகளை அணிவதைக் கட்டாயமாக்க வகை செய்யும் மசோதாவை ராஜ்ய சபையில் போக்குவரத்து அமைச்சர் ஜி.எல்.தில்லான் பிரேரித்தார்.
எனினும், தலைப்பாகை அணியும் சீக்கியர்களுக்கு இது பொருந்தாது. மோட்டார் வாகனங்கள் (இரண்டாவது திருத்த) மசோதா என்று இதற்குப் பெயர். விபத்து ஏற்பட்டால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களுக்கு காயம் அல்லது மரணம் ஏற்படுவதைத் தவிர்ப்பதே மசோதாவின் நோக்கம் என்று, மசோதாவின் நோக்கங்கள், காரணங்கள் பற்றிய அறிக்கை கூறுகிறது.
மோட்டார் சைக்கிள்களுக்கு வேக வரம்பு நிர்ணயிக்கவும் மசோதா உத்தேசித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் ஒரு சாதனத்தைப் பொருத்தி அதை அமல் நடத்த உத்தேசிக் கப்பட்டுள்ளது.
Advertisement
மதுபானம் குடித்துவிட்டு மோட்டார் வண்டிகளை ஓட்டுவதாகச் சந்தேகிக்கப்படும் நபர்கள் மூச்சு சோதனைகளுக்கும் பரிசோதனைச் சாலை சோதனைகளுக்கும் உட்பட வேண்டும் என்று வகை செய்ய சட்டத்தில் புதிதாதக மூன்று பிரிவுகளைச் சேர்க்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
விபத்துகளைக் குறைப்பதற்காக, இத்தகைய விபத்துக்குக் காரணமாயிருக்கும் குற்றங் களுக்கு - அதாவது குடிபோதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டுவது அல்லது மோட்டார் சைக்கிளில் செல்வது, போதை மருந்து சாப்பிட்டுவிட்டு மோட்டார் சைக்கிளை ஓட்டுவது அல்லது கண்மூடித்தனமாக அல்லது அஜாக்கிரதையாக வண்டி ஓட்டுதல் போன்றவற்றுக்கு கடுமையான தண்டை அளிக்க மசோதா வகை செய்கிறது.