கல்வி மணி

TNPSC-IV தேர்விற்கான அரங்கம்: பொதுத் தமிழ் - 27

உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தாலும் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்

தினமணி

* தொல்காப்பிய நெறி நின்றவர் - கம்பர்

* வடமொழி எழுத்தையும் பிறமொழிக் கலப்பையும் தடுத்தவர் - கம்பர்

* உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்துவிட்டாலும் திருக்குறளும், கம்பன் காவியமும் இருந்தாலும் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம் என்றவர் - கால்டுவெல்.

உரைநடை: அண்ணல் அம்பேத்கர்

* அம்பேத்கர் மராட்டிய கொங்கண் மாவட்டத்தில் தபோலி என்னும் அம்பவாடே பிறந்தார்.

* பிறந்த தேதி: 14.04.1891

* தந்தை: இராம்ஜி சக்பால்

* தாய்: பீமாபாய்

* இவர்களுக்கு 14வது பிள்ளையாகப் பிறந்தார்.

* இயற்பெயர்: பீமாராவ் ராம்ஜி

* மகாபாரதப் பீமனைப்போலவே தன்மகனும் எவருமே அசைக்க முடியாத வீரனாக வருங்காலத்தில் வரவேண்டும் என்ற எண்ணத்தில் பீம் எனப் பெயர் சூட்டினார் தந்தை இராம்ஜி சக்பால்.

* ஆசிரியர் என்பவர் அறிவுக்கடலாக மட்டுமன்றி அறத்தின் ஆழியாகவும் விளங்க வேண்டும்.

கல்வி:

* 1908 இல் எல்பின்ஸ்டன் பள்ளியில் உயர்நிலைப்படிப்பு

* 1912 இல் பம்பாய் எல்பின்ஸ்டன் கல்லூரியில் இளங்கலை பட்டம்

* 1915 இல் அமெரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம்

* 1916 இல் இலண்டம் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் இலண்டன் சென்று அறிவியல் முதுகலைப் பட்டமும் பாரிஸ்டர் பட்டமும் பெற்றார்.

அம்பேத்கர் முதலில் நடத்தப் பெற்ற போராட்டங்கள்:

* 1924 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள வைக்கத்தில் நடத்திய ஒடுக்கப்பட்டோர் ஆலயநுழைவு முயற்சியும்,

* 1927 ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் இருபதாம் தேதி அம்பேத்கார் மராட்டியத்தில் மகாத்துக் குளத்தில் நடத்திய தண்ணீர் எடுக்கும் போரட்டமும் மனித உரிமைக்காக முதலில் நடத்தப்பட்ட போராட்டங்கள் எனலாம்.

* இங்கிலாந்து சொல்வதற்கெல்லாம் இந்தியா தலையசைக்கும் என்பது தவறு; இந்தநிலை எப்போதோ மாறிவிட்டது; இந்திய மக்களின் எண்ணங்கலை நீங்கள் ஈடேற்ற வேண்டும்" என ஆங்கிலேயரிடம் அச்சமின்றி ஆணித்தரமாகக் கூறியவர் - அன்னல் அம்பேத்கர்.

* தன்னாட்சித் தகுதியை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என முன்மொழிந்தவர் - அன்னல் அம்பேத்கர்.

* வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு - 1930

* அந்த மாநாட்டில் அம்பேத்கர் கலந்துகொண்டார்.

* அரைவயிற்றுக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக நான் பேசுகிறேன் என்று தனது கருத்தைத் தொடங்கினார் அம்பேத்கர்.

* ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் வட்டமேசை மாநாட்டின் வழியே உலகஅரங்கில் எதிரொலித்தது.

* இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் வகுக்க 7 பேர்  கொண்ட குழு அமைக்கப்பட்டது.

* இந்தியா முழுமையான குடியரசு நாடாகத் தன்னை அறிவித்துக் கொண்ட தேதி - 26.01.1950

* செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வி களர்நிலம்

* உழைப்பும் கல்வியும் அற்ற செல்வம் மிருகத்தனம் என்றவர் அம்பேத்கர்.

* மக்கள் கல்விக்கழகத்தைத் தோற்றுவித்தவர் - அம்பேத்கர்

* 1946 ஆம் ஆண்டு மக்கள் கல்விக்கழகத்தைத் தோற்றுவித்தார்.

* மும்பையில் அவரின் அரிய முயற்சியால் உருவான சித்தார்த்தா உயர்கல்வி நிலையத்தில் இன்றைய அறிவு வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்துப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன.

* இந்தியாவின் தேசியப் பங்குவீதம் என்னும் நூலைப் பொருளாதாரத் துறையின் சிறந்த நூலாகக் கருதிப் பொருளியல் வல்லுநர்களும் பேரசிரியர்களும் பெரிதும் மதித்துப் போற்றினார்கள்.

* இந்திய நாட்டின் சாதி என்னும் இருளை அகற்ற வந்த அறிவுக்கதிர் அம்பேத்கர்.

* சமூகத்தின் மாற்றத்திற்குச் சிந்தனை விதைகளைத் தூவுகின்ற புரட்சியாளர்களாலேயே இந்த வையகம் வாழ்கிறது என்றவர் அம்பேத்கர்.

* சனநாயகத்தின் மறுபெயர்தான் சகோதரத்துவம்; சுதந்தரம் என்பது சுயேச்சையாக நடமாடும் உரிமை; உயிரையும் உடைமையையும் பாதுகாக்கும் உரிமை அது.

* எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் எல்லா மனிதர்களையும் ஒரே மாதிரி நடத்துவதே சமத்துவமாகும் என்று சனநாயகத்திற்கு அரியதொரு விளக்கம் தந்தவர் அம்பேத்கர்.

* சமத்துவத்தின் மறுபெயரே மனிதநேயம்; எங்கே சமத்துவம் மறுக்கப்படுகின்றதோ, அங்கே மனிதப் பண்பு மறைந்துவிடுவதை அவர் அனைவருக்கும் உணர்த்தியவர் அம்பேத்கர்.

பெரியாரின் புகழாரம்:

* அம்பேத்கர் உலகத் தலைவர்களுள் ஒருவர்

* பகுத்தறிவுச் செம்மல்

* ஆராய்ச்சியின் சிகரம்

* மக்களின் மாபெரும் வழிகாட்டி

* அப்பெருந்தலைவரைப்போல வேறு யாரையும் நாம் காணமுடியாது என்று பெரியார் புகழாரம் சூட்டினார்.

* அம்பேத்கரை ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய தனியாள் நூலகத்தை அமைத்த பெருமை இவரையே சாரும் என்று புகழ்ந்தவர் - நேரு

* தன்னலமற்றவர்; மிகவும் ஆர்வத்துடனும் விரைந்து தன்னந் தனியாகச் செயல்பட்டவர். தமக்கு கொடுக்கப்பட்ட பணியில் கருமமே கண்ணாக இருந்தவர் என்று இராசேந்திர பிரசாத் பாராட்டியுள்ளார்.

* இறப்பு : 06.12.1956

விருதுகள்:

* இந்திய அரசு 1990 ஆம் ஆண்டு பாரத ரத்னா (இந்திய மாமணி) என்னும் உயரிய விருதை அண்ணல் அம்பேத்கருக்கு வழங்கி பெருமைப்படுத்தியது.

* சமுதாயமெனும் மரத்தின் வேரைச் சாதிப் புழுக்கள் அரித்துவிடாமல் தடுத்த நச்சுக்கொல்லி மருந்து அவர்.

துணைப்பாடம்: அன்றாட வாழ்வியல் சட்டம்

* உலக நாடுகளிடையேயுள்ள தொடர்புகளை ஒழுங்கு படுத்தும் சட்டத்தை அனைத்து நாட்டுச் சட்டம் என்கிறோம்.

* நம் நாட்டின் முதன்மையான வாழ்வியல் அடிப்படைச் சட்டத்தை அரசியல் அமைப்புச் சட்டம் என்கிறோம்.

* நாட்டின் நாடாளுமன்றமும் மாநிலச் சட்டமன்றங்களும் அரசுத் துறைகளின் அலுவலகங்களும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில்தான் இயங்குகின்றன.

* பெளத்தர்களுக்கும் சமணர்களுக்கும் தனியான மதச் சட்டங்களென எவையுமில்லை.

* சட்டப்படி தண்டிக்கத்தக்க செயலையே குற்றமென்கிறோம்.

* குற்றங்கள் சட்டம் செய்யக்கூடாது என்று வலியுருத்திச் சொன்னதைச் செய்தல் மற்றொன்று, சட்டம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவதைச் செய்யாமல் இருத்தல் என இருவகைப்படும்.

போக்குவரத்து சட்டங்கள்:

* சிவப்பு விளக்கு எரிந்தால், உடனே வண்டியை நிறுத்துதல் வேண்டும்

* பச்சை விளக்கு எரிந்தால் புறப்படுதல் வேண்டும்.

* அரசியல் சாசனத்தின் 19(1) ஆவது பிரிவின்படி குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் முழுமையான பேச்சுரிமை, எழுத்துரிமை உண்டு.

* தகவல் அறியும் உரிமைச்சட்டம் சரத் - 2005 பிரிவு 6

* International Law - சர்வதேச சட்டம்

* Constitutional Law - அரசியில் அமைப்புச் சட்டம்

* Supreme Court - உச்சநீதி மன்றம்

* High Courts - உயர்நீதி மன்றங்கள்

* Writs - சட்ட ஆவணங்கள்

* Substantive Laws - உரிமைச் சட்டங்கள்

* Procedureal Laws - செயற்பாட்டு முறைச்சட்டங்கள்

* Indian penal code - இந்தியச் தண்டனைச் சட்டத் தொகுப்பு

* Criminal Procedure code - குற்றவியல் செயற்பாட்டுமுறைத் தொகுப்பு

* Civil Procedure code - உரிமையியல் செயற்பாட்டுமுறைத் தொகுப்பு

* Indian Evidence Act - இந்தியச் சான்று சட்டம்

* Transfer of Property Act - சொத்துமாற்றுச் சட்டம்

* Indian Succesion Act - இந்திய வாரிசுரிமைச் சட்டம்

* Court fee stamp - நீதிமன்றக் கட்டண வில்லை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மொச்சை பட்டாணி சுண்டல்

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

தேச துரோக பேச்சு நடிகா் பிரகாஷ் ராஜீ மிது தில்லி போலீஸாா் வழக்குப்பதிவு

தாா் வாகனம் சாலைத் தடுப்பில் மோதி 5 போ் பலி! தில்லி குருகிராம் விரைவு சாலையில் சம்பவம்!

SCROLL FOR NEXT