கவிதைமணி

வானமழை நீ எனக்கு: - கோ. மன்றவாணன்

கவிதைமணி

இலக்கின்றி நான்நடந்தேன்
இருட்டுக்குள் தான்கிடந்தேன்
விளக்கொன்றை ஏற்றிவழி காட்டி வைத்தாய் – என்னுள்
விதவிதமாய் வண்ணங்கள் தீட்டி வைத்தாய்!
வறண்டுவிட்ட நிலமாக
வற்றிவிட்ட குளமாக
புரண்டுவிட்ட என்வாழ்வை மீட்டுத் தந்தாய் – ஒரு
புதுராக மெட்டமைத்துப் பாட்டுத் தந்தாய்!
ஊர்மதிக்க வில்லையடி
உள்ளத்தில் தொல்லையடி
வேர்நசிந்து நான்சாயும் போது வந்தாய் -  உன்
மென்தோளில் எனைத்தாங்கி முத்தம் தந்தாய்!
அழகில்லை பணிஇல்லை
அட,வாழ்வே இனிஇல்லை
இழவுவீட்டுப் பிணமானேன்; என்ன நினைத்தாய்? – ஓர்
இதயமாக உயிராக வந்து அணைத்தாய்!
உனைப்பார்த்து முளைவிட்டேன்
உனைநினைத்து இலைவிட்டேன்
வாழ்வதற்கே கிளைவிட்டேன் பெண்ணே பெண்ணே! – என்றும்
வானமழை நீஎனக்குக் கண்ணே கண்ணே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேலுக்குச் செல்லும் பிரதமர் மோடி: நெதன்யாகுவுடன் புதன்கிழமை சந்திப்பு!

உச்ச மதிப்புள்ள முதல் 6 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 63,000 கோடியாக உயர்வு!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பயிற்சியில் சேர வேண்டுமா..?

சர்வதேச அரங்கில் சொந்த நாட்டுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தும் காங்கிரஸ்! - பிரதமர் மோடி

சூப்பர் 8 சுற்று: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா பேட்டிங்!

SCROLL FOR NEXT